Saturday, December 3, 2011

எனக்கு பிடித்த பாடகர் கார்த்திக்


http://tamilwire.com/images/2011/10/singer-karthik.jpg
இசையில் , பாடல்களில் மயங்காதோர் யாரும் இல்லை . இப்போது வெளி வந்து கொண்டு இருக்கும் பல பாடல்களில் பாடகர் கார்த்திக்கின் குரல் எப்படியும் இருக்கும் . ஒரு பாடலாவது பாடி இருப்பார் . இனிமையான குரல் , எல்லோரையும் மயக்கும் குரல், எல்லோருக்கும் பிடித்த குரல் , சிறப்பான உச்சரிப்பு என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார் பாடகர் கார்த்திக் .

சமீபத்தில் வந்த பாடல்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்தவர் கார்த்திக் தான் . என்பது சதவீத பாடல்கள் கார்த்திக் பாடியவையாகத்தான்  இருக்கின்றன . 1980 ஆம் ஆண்டு பிறந்தவர் கார்த்திக் . ஆரம்பத்தில் இசைப்புயல் ரகுமானிடம் இருந்து பல பாடல்களை பாடினார் . பின்னர் பல இசை அமைப்பாளர்கள் விரும்பும் பாடகராக மாறத்தொடங்கினார் . தமிழ் , இந்தி, தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடி உள்ளார் . 
http://images.muzigle.com/files/media/filter/medium/transfer/img/kartik.png

எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா என்ற பாடலின் மூலம் எல்லோரது மனதையும் தொட்டவர் . 2001 ஆம் ஆண்டு பிரசாந்தின் ஸ்டார் படத்தில் "நேந்துக்கிட்டேன் ....." என்ற பாடல் மூலம் அறிமுகமானார் . அந்த முதல் பாடலே எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஹிட் பாடல் ஆனது . மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடி முடித்துள்ளார் இந்த பத்து வருடங்களில் . கஜனி படத்தில் " ஒரு மாலை " பாடல் ஹிட் பாடல் . 
http://www.thehindu.com/multimedia/dynamic/00632/17MPKARTHIK_632470f.jpg
வாரணம் ஆயிரம் படத்தில் கார்த்திக் பாடிய " அவ என்ன என்ன " அந்த பாடல் எல்லா இளையர்களும் விரும்பி கேட்கும் பாடல் ஆனது . "தேரடி வீதியில் தேவதை வந்தா ", கண்பேசும் வார்த்தைகள் ",கனவெல்லாம் பலிக்குதே , உயிரே என்னுயிரே , காலங்காத்தால , விழி மூடி யோசித்தால் ", "அசிலி பிசிலி ", "சுத்துதே சுத்துதே பூமி "
 என்று இவரது சூப்பர் ஹிட் பாடல்கள் ஏராளம் .

http://static.diimg.com/profile_thumbs/karthik-singer_main.jpg
மயக்கும் குரலை கொண்டு பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்து கொண்டு இருக்கிறார் கார்த்திக் . வேலாயுதம் , மங்காத்தா படங்களிலும் இவர் பாடிய பாடல்கள் உண்டு . அரவான் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகி இருக்கும் கார்த்திக் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் , இன்னும் பல பாடல்களை பாட வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பு . ஆவல் . ஆசை . 



1 comment:

Anonymous said...

i like mun anthi saaral nee song


vino