ஒவ்வொரு வருடங்களிலும் நாம் சாதித்தவை, சாதிக்க இருப்பவை என பட்டியல் இடுகின்றோம். அவற்றில் சில நடக்கிறது . பல நடக்காமல் மற்றைய வருடத்தில் பார்த்து கொள்ளலாம் என எம் மனம் நினைக்கிறது .
நாம் ஒவ்வொரு திட்டங்களை வகுக்கிறோம். சில எளிதில் நடைபெறுகிறது. சில விடயங்களுக்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கிறது . எதிலும் திட்டமிடல் அவசியம். அதனை திட்டமிட்டால் மட்டும் போதாது . அவற்றை செயல்படுத்தும் திறனுமிருக்க வேண்டியது அவசியம் .
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் , பேச்சும் , எழுத்தும் எவ்வளவோ முக்கியமானது. நாம் எப்போதும் எமது வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்லல் வேண்டுமே தவிர பின்னோக்கி செல்ல கூடாது . எமது பேச்சு, செயல் என்பன ஒவ்வொரு வருடங்களும் முன்னேற்றம் இருக்க வேண்டும்.
இந்த வருடம் எமது சேமிப்பு, வாழ்க்கை , பொருளாதாரம் மேம்பட வேண்டும் என எண்ணுகிறோம். அவற்றை நடைமுறை படுத்த திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். எண்ணிய கருமங்கள் நடக்க வேண்டும் என இறைபிரார்த்தனை முக்கியம்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும், மற்றையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், உறவினர்கள் , நண்பர்களோடு சந்தோசமாக இருக்க வேண்டும். வீணான பேச்சுகளை குறைக்க வேண்டும். அடுத்தவர் மனம் புண்படும் படியாக பேச கூடாது என்று பல பல எண்ணங்கள் நம் மனதில் தோன்றும் . அவற்றை எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டும்.
இவ்வருடம் எல்லோருக்கும் இனிமையான, சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக!
3 comments:
சிறப்பான எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
இவ்வருடம் எல்லோருக்கும் இனிமையான, சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக!
சிறப்பான பகிர்வு...
இந்தாண்டு நிறைய எழுதுங்கள்...
நன்றி தனபாலன் .
நன்றி குமார்
Post a Comment