Monday, May 19, 2014

நம் கவலைகள் அழும்போது தீர்கின்றன




எல்லோர் மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் . மனிதன் சந்தோசம் வரும் போது சிரிக்கின்றான், கவலை வரும் போது அழுகிறான் . 

ஒரு கவலை முடிய இன்னொரு கவலை வரும் . கவலைகள் தீர்வதில்லை . மாறாக துன்பங்களையே தந்து கொண்டு இருக்கின்றன . எதையுமே மனம் விட்டு பேச வேண்டும். நாம் அடக்கி அடக்கி வைத்து நம் கவலைகளை நமக்குள்ளே வைத்து புதைத்து வைத்து இருந்தோமானால் நாம் நோயாளியாகி , மன நோயாளியாகி கூட போகும் நிலைமை வந்து விடுகின்றது .

துன்பங்கள் வரும் போது மனது சஞ்சலம் அடைகின்றது . மனதை திடம் படுத்துகின்றோம் . முடியவில்லை . நான்கு பேரிடம் சொல்கின்றோம் முடியவில்லை . நம் கவலைகளை இன்னொருவருடன் சொல்லி அழும்போது நமது மனமும் இலேசாகின்றது . கவலையும் குறைகின்றது . 
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகின்றது . அது போல் மனதில் உள்ள பாரத்தை குறைக்க மனம் விட்டு பேசி அழுங்கள் , துன்பம் குறையும் . மனதும் இலேசாகும் . 

1 comment:

Anonymous said...

mmmmmmmm unmai thaan