Thursday, January 8, 2015

2015 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி .........



2014 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2015 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம் . உலகெங்கிலும் அனைத்து மக்களும் சந்தோசமாக புதிய ஆண்டை வரவேற்றுள்ளோம் . உலகில் இயற்கை அனர்த்தங்களும், சண்டைகள், சச்சரவுகள் என்று மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது . எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஆண்டையும் நாம் அனைவரும் சந்தோசமாக வரவேற்கின்றோம் .

ஒவ்வொரு ஆண்டும் எல்லோரும் பல திட்டங்கள், யோசனைகளை மனதில் தீட்டி வைத்து இருப்பார்கள் . எல்லோருடைய எண்ணங்களும் ஈடேற வேண்டும். எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் எண்ணம் .

இறை பிரார்த்தனை எல்லோருக்கும் மிக முக்கியம் . அடுத்து மனதை ஒரு நிலைப்படுத்தல் . அதாவது யோகா அல்லது தியானம் . உடல்பயிற்ச்சி . நாம் சாப்பிடுகின்ற உணவுகள் சீரான இடைவெளியில் இருக்க வேண்டும். அவை சமிபாடு அடைய வேண்டும். துரித உணவுகளை உண்டு பலவித நோய்களை நாம் தேடி கொள்கின்றோம். கூடுமானவரை இயற்கை உணவுகள் உண்பது நல்லது. காய்கறி வகைகள் உடம்புக்கு நல்லது . நமது உடல்நிலையும் ஒவ்வொரு வருடமும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டு ஒன்று போகும் போது வயது ஒன்றும் போகும் தானே .

எல்லோருக்கும் இனிய ஆண்டாக , சந்தோசமான ஆண்டாக 2015 ஆம் ஆண்டு அமையட்டும் .

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...