Saturday, May 14, 2011

முதல்வராகிறார் ஜெயா

http://newssignal.files.wordpress.com/2011/01/jayalalitha-speech-madurai2.jpg

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன . தி. மு .க மண்ணை கவ்விக் கொண்டது . அ.தி .மு .க அபார வெற்றி அடைந்தது . எல்லோரும் மாற்றம் வேண்டும் என்று யோசித்தார்கள் . மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்தார்கள் . ஊழல் , குடும்ப ஆட்சி , மின்சார வெட்டு என பல வழிகளில் துன்பபட்ட மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கட்டும் .

தமிழகத்தில் இம்முறை அதிகமான பெண்கள் வாக்கு அளித்துள்ளனர் . மக்கள் தி . மு. க. ஆட்சியில் இருந்து விடுபட்டு ஒரு மாற்றம் வேண்டும் என யோசித்து ஜெயாவை வெற்றிபெற செய்துள்ளனர் . சீமானின் வருகையும் , விஜய் ரசிகர்களின் ஆதரவும் , அதனை விட விஜயகாந்தின் பெரும் எழுச்சியும் ஜெயாவுக்கு அபார வெற்றியை பெற்றுக் கொடுத்தது .
http://static.indianexpress.com/m-images/Sat%20Mar%2028%202009,%2011:50%20hrs/M_Id_68736_j_jayalalitha.jpg
தமிழக தேர்தல் முடிவு பற்றி நடிகர் விஜய் கருத்து தெரிவிக்கையில் ,"ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார் . 

 தமிழ் மக்கள் வாழ்வில் விடிவு பிறக்க வேண்டும் . எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் சந்தோசமாகவும் , ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் . ஏழை மக்களின் துயர் துடைக்க வேண்டும் . தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்த வேண்டும் அடுத்த முதல்வர் ஜெயா அம்மா என்பதே எல்லோரினதும் அவா . 

No comments: