Monday, October 26, 2009

சுத்தமாக இருப்போம்


சுத்தம் சுகம் தரும் . நாம் எல்லோரும் சுத்தமாக இருக்க பழக வேண்டும் . ஏனெனில் சிலருக்கு சுத்தம் என்றால் என்ன என்று தெரியாது .

சாப்பிட்டவுடன் உடனே கைகளை  கழுவவும் . சுத்தமாக இருந்தால் நோய்கள் வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும் . வீட்டையும் சுற்று புற சூழலையும் துப்பரவாக வைத்து இருக்க வேண்டும் .

சில வீடுகளுக்கு போனால் தேநீர் குடிப்பதற்கே மனம் வராது. அவ்வளவு குப்பையாக இருக்கும் வீடும் , சமையல் அறையும் . தேநீர் குடிக்கும் கப்பே கழுவி எவ்வளவு நாளாக இருக்கும் . அப்போது அந்த வீட்டுக்கு போகவே மனம் வராது .

ஏன் இப்படி இருக்க வேண்டும் . சுத்தமாக இருந்தால் எமக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது தானே.  சின்ன பிள்ளைகள் இருக்கும் வீடுகள் மிகவும் துப்பரவாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களில் எது படுகிறதோ அதை எடுத்து விளையாடுவார்கள் . வாய்க்குள் வைப்பார்கள் . சில மருந்துகளையும் வாய்க்குள் வைத்து விடுவார்கள் . மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .
 

சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு சுத்தம் பற்றி விளக்கி சுத்தமாக இருக்க பழக்கினால் அவர்கள் பிறகு அவற்றை பழகி விடுவார்கள் . பெரியவர்கள் ஆனதும் தம்மையும் வீடு , சுற்று  புறங்களையும்  சுத்தமாக வைத்து இருப்பார்கள் .

சில வீடுகளுக்கு போனால் பிள்ளைகள் மண்ணுக்குள் விளையாடி வாய்க்குள் கைகளை வைத்தும் , மண்ணில் விழுந்த இனிப்பு பண்டங்களை எடுத்து சாப்பிட்டு கொண்டும் இருப்பார்கள் . தாய் , தந்தை அவற்றை கவனிக்காது விட்டு விடுவர். அதை அப்படியே கவனிக்காது விட்டால் அந்த பிள்ளை எங்கு சென்றாலும் நிலத்தில் கிடக்கும் பொருட்களை எடுத்து வாய்க்குள் வைக்க தான் செய்யும் .




 அதனால் பெற்றோர் பிள்ளைகளை கவனிப்புடன் வளர்த்து , இப்படி செய்ய கூடாது . நிலத்தில் கிடக்கும் இனிப்பு பண்டங்களை எடுத்து சாப்பிட கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும் .

அழுக்கான ஆடைகளை  உடுக்க கூடாது . தண்ணீர் தேங்க விடாமல் நோய் பரப்பும் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ளவும் . தூங்கும் போது நுளம்பு  வலைகள் உப்யோகித்து நுளம்புகளால்  பரவும் டெங்கு, மலேரியா,போன்ற வைரசுகளிடமிருந்து  பாது காக்க வேண்டும் . வைரஸ் அதிகமாக இருக்கும் என கருதும் மேற்கண்ட இடங்களை சோப்பு மற்றும் டெட்டால் போன்ற மருந்துகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது. வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் நாள் தோறும் அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும்  குளிப்பது மிக நல்ல பழக்கம்.இது தினமும் உடலில் தங்கும் கிருமிகளை நீக்குகிறது.உணவு உண்ணும் முன்பும் , பின்பும்  கைகளை சுத்தமாக கழுவுவது மிக முக்கியம். வீட்டில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிக்காமல் பார்த்து கொள்ளவும் .

 கிருமிகள் இருந்தால் இறந்து விடும் . எப்போதும் கொதித்து ஆறிய நீரை பருகவும் .
எனவே நாம் எல்லோரும் சுத்தமாக இருந்து நோய் நொடி இன்றி வாழ பழக் வேண்டும்

 

சுத்தமான வாழ்வு . 
சுகாதார பராமரிப்பு .



1 comment:

Jafarullah Ismail said...

சுத்தம் சோறு போடும் என்பதும் உண்மை