Monday, March 1, 2010

தனிமை

ஏன் தான் இந்த
தனிமையடா நண்பா
தாயிருந்தும், தந்தையிருந்தும்
உன் உடன்பிறந்த
இரு சகோதரர் இருந்தும்
நீ ஏன் தனிமையை
விரும்புகிறாய் ?


உன் காதலி
உன்னை ஏமாற்றி
விட்டு பொய் விட்டாள்
என்று கதி கலங்குகிறாயா ?
என்னடா ? உன் மேல்
எனக்கு வெறுப்பு வருகிறது .


http://thumb15.shutterstock.com.edgesuite.net/display_pic_with_logo/354466/354466,1242343340,1/stock-photo-teen-boy-sits-alone-in-a-barn-30494884.jpg 
அவளோ உன்னை
காதலித்து விட்டு
இன்னொருவரை திருமணம்
செய்து ஜேர்மனில்
இருக்கிறாள் - ஆனால்
நீ தாடி வைத்து
முடி வளர்த்து
ஒரு பிச்சைகாரனை விட
கேவலமாய் இருக்கிறாய் 


உன்னை என்னென்று சொல்வது ?
அவளும் உன்னை காதலித்தால்
நீயும் அவளை காதலித்தாய்
ஆனால் அவளோ உன்
வாழ்க்கையை இப்படி
தலை கீழாக
மாற்றி விட்டு போய்
விட்டாள் - ஆனால்
அவளோ சுக போக
வாழ்க்கை வாழ்கிறாள் .


நண்பா நீ இருளுக்குள்
இருந்தது போதும்
வெளிச்சத்துக்கு வாடா
இந்த உலகத்தை பார்
மற்றவர்களை போல்
நீயும் வாழ்க்கையை
மாற்றி கொள் - அதுதான்
உன் பெற்றோருக்கு
நீ செய்யும் கடமை
அவர்களை சந்தோசமாக
வைத்திரு - நண்பா
இது உனக்காக
உன் நண்பி சொல்வது .............
   

4 comments:

Anonymous said...

naanum ippadi irunthirukkiren pavi.
enna seivathu?



abarna

akila said...

ம்ம்ம்ம் இப்படி எத்தின பேர் ஏமாத்துறாங்க

Pavi said...

நன்றி அபர்ணா உங்கள் வருகைக்கு

Pavi said...

நன்றி அகிலா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்