Friday, April 16, 2010

பையா பட பாடல் வரிகள்

கார்த்தியும் ,தமன்னாவும் நடித்து வெளிவந்த படம் தான் பையா . படம் பெரிதாக பேசப்படாவிட்டாலும் பையா பட பாடல்கள் சூப்பர் ஹிட் தான் . நல்ல பாடல்கள் , வரிகளும் அருமை . பாடகர்களும் நன்றாக பாடி இருக்கிறார்கள் . இசையும் அருமை . எனக்கு ரொம்பவும் பையா படத்தின் பாடல்கள் பிடித்து இருக்கின்றன . கூடுதலாக எல்லோருக்கும் இந்த பட பாடல்கள் பிடித்து இருக்கின்றன . காட்சி அமைப்பும் அருமை .  இதோ பையா படத்தின் எனக்கு பிடித்த பாடல் வரிகள் .
http://3.bp.blogspot.com/_FylGS8_9K7U/SdNuWisD2MI/AAAAAAAAQZM/oJ6xDR0zD3c/s400/paiyaa-movie-stillspaiyaa-movie-imagespaiyaa-movie-photo-gallery-6.jpg 
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு , கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால , மழை கூட சூடாச்சு

http://4.bp.blogspot.com/_FylGS8_9K7U/Sf85jGmatFI/AAAAAAAASXU/EaOmNBOP6kU/s400/paiyaa.jpg 
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
http://www.southgossips.com/wp-content/uploads/2009/04/paiyaa-movie-stills-images-5.jpg 
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்க்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்.
http://vibetalkies.com/files/2009/11/Paiyaa01-big-300x247.jpg 
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

http://www.musiqwave.co.cc/paiyaa241109_1.jpg 
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்.
http://blog.quicinfo.com/wp-content/uploads/2009/11/Paiyaa_stills_02.jpg 
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ! 

http://www.southgossips.com/wp-content/uploads/2009/10/paiyaa-23.jpg 
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
      

5 comments:

Anonymous said...

enakku ellaa sonkum pidikkum.


suba

Anonymous said...

i like this all song.

Pavi said...

எனக்கும் பிடிக்கும் .
நன்றி சுபா

ஞானப்பழம் said...

இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே அருமையாக ரசிக்கக்கூடியதாய் இருந்தது

Pavi said...

நன்றி ஞானப்பழம்