தமன்னாவின் சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது . அவ்வளவுக்கு அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது . தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் தமன்னா . கைவசம் பல படங்கள் உண்டு . நடிகர்கள் எல்லோரும் தமன்னாவுடன் நடிப்பதற்க்கு போட்டா போட்டியாக இருக்கிறார்கள் . அவரின் நடிப்பு , கவர்ச்சி என எல்லா விசயத்திலும் அசத்தி கொண்டு இருக்கிறார் .
. இவர் முதன்முதலாக நடித்த தமிழ் படம், `கேடி. அந்த படம் பெருசாக பேசப்படவில்லை . அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் `கல்லூரி. இப்படி ஒரு அழகான பொண்ணு இருக்கு என்று அடையாளம் கண்டு கொண்டனர் ரசிகர்கள் .
தமன்னா, `அயன்` படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமன்னாவின் `மார்க்கெட்` அந்தஸ்து உயர்ந்தது. 7 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், 40 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார். அயன் இவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது .
அதன் பின் தமன்னா காட்டில் மழை தான் .அவ்வளவுக்கு பிசியான நடிகையாக மாறி விட்டார் . ஏகப்பட்ட வாய்ப்புகள் . அப்படி தயாரிப்பாளர்கள் அலை மோதினர் , நடிகர்கள் தமன்னாவை தமது படங்களுக்கு நடிகை ஆக போடுமாறு இயக்குனர்களை வேண்டி கொண்டனர் . விடுவாரா தமன்னா. தனது சம்பளத்தை உயர்த்தாமல் ?
தொடர்ந்து தமன்னா தனது சம்பளத்தை 50 லட்சமாக உயர்த்தினார். `பையா` படத்துக்கு, அவர் 50 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்கினார். `பையா` படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடுவதால், தமன்னா இப்போது தனது சம்பளத்தை 1 கோடியாக உயர்த்தி விட்டார். இனிமேல் அவர் பிரபல கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறார். இனி நடிக்கும் படங்களில் எல்லாம் தமன்னா தனது சம்பளமாக 1 கோடி சம்பளம் பெறுவார் . ம்ம்ம்ம்ம்ம்ம் இதுதானப்பா முன்னேற்றம் என்கிறது ? அதிஸ்டம் என்கிறது ?
7 comments:
mmmmmm ivvalavu sampalamaa???
mano
appadiyooooooooooooo
vino
thamanna kaaddil malai thaan.
sekar
ம்ம்ம்ம்ம்ம் நன்றி மனோ
உண்மைதான் வினோ
ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க சேகர் .
என்னோட ஃபேவரிட்டும் தமன்னா. ஜெயிக்கிற குதிரைக்குக் கொடுப்பது தப்பில்லை.
ஸ்ரீ....
Post a Comment