Friday, March 8, 2013

மகளிர் தினம்




மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் . ஒரு வீட்டின் முதுகெலும்பாக செயற்படுவதும் பெண்கள் . ஒவ்வொரு நாடுகளிலும் பெண்கள்படும் அவஸ்தைகளும் , சித்திரைவதைகளும் இப்போதெல்லாம் அதிகமாக காணப்படுகிறது .

பெண்களது பாதுகாப்பை , அவர்களின் கெளரவம் என்பவற்றை எல்லா நாடுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது இப்போதைய காலகட்டத்தில் . எல்லா பெண்களும் கல்வி கற்று இருக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தை கொண்டு நடத்தக் கூடிய பக்குவம் , அறிவு என்பன ஏற்படும் . 

தாமும் வேலைக்கு போய் தமது குடும்பத்தை காக்க வேண்டும் என்று இப்போதைய பெண்கள் பலர் வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர் . கைநிறைய சம்பளமும் பெறுகிறார்கள் . ஆண்களுக்கு நிகராக வேலைக்கு சென்று பணமும் சம்பாதிக்கின்றனர் . 

பெண் என்பவள் சமுதாயத்தின் முதுகெலும்பாகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் வன்முறை , கொடுமைகள் ஆகியவை நிறுத்தப் பட வேண்டும் . ஒரு தாயாக , மனைவியாக , தங்கையாக , அக்காவாக , மாமியாக , நண்பியாக பல கோணங்களில் பரிணமிக்கிறாள் பெண் . 

பிள்ளைகளை பெற்று ஒரு சிறந்த குடிமகனாக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறாள் . ஒரு மகனின் தோழியாக , அம்மாவாக ஒரு பெண் இருக்கிறாள் . என்னுடைய ரோல் மாடல் அம்மா தான் . என் தோழி தான் என்கிறான் ஒரு ஆண்மகன் . 

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு மனைவி , தாய் , தோழி இருக்கிறாள் . பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் . எந்த நாட்டிலும் பாதுகாப்பாக பெண்கள் இருக்க வேண்டும். கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் . 




2 comments:

அம்பாளடியாள் said...

அருமையான இப் பகிர்வுக்கு நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

Pavi said...

நன்றி