Wednesday, July 31, 2013

எனக்கு பிடித்த பாடல்


"எங்கே எனது கவிதை" என்ற படத்தில் இருந்து உன்னிகிருஷ்ணன் பாடிய "இருமனம் சேர்ந்து ஒருமனம்" பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் . அழகான வரிகள் . 


இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் இன்று 
இரு உயிர் சேர்ந்து ஓருயிர் ஆகும் ஒத்திகை இன்று 
உனக்கென ஒரு சொந்தம் இன்று தான் ஆரம்பம் 
உனக்கதில் ஆனந்தம் அதுவே  என்னின்பம் 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 
ஓ .....இறைவன் போடும் கட்டளை இதுதான் 
வாழ்க்கை எனும் புத்தகம் இதுதான் 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 

யாருக்கு யார் என்று எழுதியதை
 இன்றுதான் உலகம் அறிந்துகொள்ளும் 
பாதியில் வந்த சொந்தம் ஒன்றே
உயிர்விடும் வரையில்   கூட வரும்  
உறவுகளின் மத்தியில் நின்று 
புது உறவு பூப்பதைக் கண்டு 
நாணமது  கண்களில் கண்டு 
கரைகிறது காதலாய் இன்று 
வாழைமரம் தோரணம் கட்ட 
வாழ்த்துக்களை வார்த்தையாய் கொட்ட 
வண்ண மலர் மாலைகள் கட்ட 
வசந்தம் வரும் வாசலை தட்ட 
ஆனந்த திருநாள் ஆரம்பம் இன்று 
வாழ்க வாழ்க வாழ்கவே  (இருமனம் )

ஆயிரம் கனவுகள்  இதயத்திலே 
அலைபாயும் சுகம் தான் தெரியுதடா 
தூரத்தில் இருந்த காதலியே 
மணவறை  வந்தால் மகிழ்ச்சியடா 
அன்னைக்கொரு மாற்று என்று 
மனைவிக்கொரு பேரும்  உண்டு 
உனக்கும் அது பொருந்தும் இன்று
 உன்னைகொடு அவளுக்கென்று 
உறவுகளின் உற்ச்சவம் இன்று 
உலகம் அதை  வாழ்த்திடும் இன்று 
அன்பு எனும் அர்ச்சனை கொண்டு
 வாழ்த்துகிறேன்  நானும் இன்று 
ஆயுளை கூட பருசாய் தருவேன் 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ (இருமனம் )




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு இனிமையான பாடல்... ரசிப்பிற்கு வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல இனிமையான பாடல்... வாழ்த்துக்கள்....

Unknown said...

இனிமையான பாடல்... வாழ்த்துக்கள்....

Pavi said...

நன்றி தனபாலன் வருகைக்கும் , கருத்துக்கும்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி ரமணன்