Thursday, October 8, 2009

நல்வழி காட்டும் பெற்றோர்


அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று படித்து இருக்கின்றோம் . படித்ததற்கு ஏற்ப நடந்து கொள்கின்றோமா எல்லோரும் . இல்லை . பத்து மாதம் சுமந்து  பிள்ளையை பெற்று எடுக்கிறாள் அன்னை . பின்பு பாசத்தையும் , அன்பையும் காட்டி பிள்ளையை வளர்த்து எடுக்கிறார்கள் . தந்தை வீட்டுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். தனது குடும்பத்தை காக்க அயராது பாடு படுகிறார். 
 
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் . இவற்றை எல்லாம் பிள்ளைகள் உணர வேண்டும் . வீட்டின் நிலைமைகளை உணர வேண்டும் . இப்படி எத்தனை பிள்ளைகள் உணர்கிறார்கள் . நூருக்கு இருவது பேர் தான்  இருப்பார்கள் .

தந்தை எவ்வளவு நான் கஷ்டப்பட்டாவது என்னுடைய பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பார் . பிள்ளைகள் எல்லோரும் இப்போது பெற்றோர் பேச்சை கேட்டு நடகின்றார்களா? இல்லை. பெற்றோர் பேச்சை கேட்பதும் இல்லை  பெற்றோரை மதிப்பதும் இல்லை .
 

பிள்ளைகளை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பயன்? பெற்றோரை எடுத்து எறிந்து பேசி பெற்றோரை கண்கலங்க , கதிகலங்க வைக்கிறார்கள் .

சில பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் சொல்வது தான் சட்டம் . பெற்றோர் அவர்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று .ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது பெற்றோர் .


பிள்ளையை கடைக்கு கூட்டி கொண்டு போனால் பிள்ளை எதை கேட்டாலும் வாங்கி பிளையின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் . அப்பிடி பிள்ளைகளுக்காக எல்லவட்டயும் செயும் பெற்றோரின் மனம் நோகும் படி பிள்ளைகள் நடக்கலாமா? இதை பிள்ளைகள் எல்லோரும் உணரத்தவறுகிறார்கள் .

குறிப்பிட்ட வயதை எட்டியதும் காதல் எனும் வலையில் சிக்கிறார்கள் . அந்த வலையில் சிக்கி அவஸ்தை படுவோர் எத்தனை பேர் . நல்லாக இருப்போர் எத்தனை பேர் ?
அதிலும் காதலித்தவருடன் ஓடி போகிறார்கள் . தமது பெற்றோரை பிரிந்து , பெற்றோரை மறந்து செல்கிறார்களே. இதெல்லாம் எவ்வளவு கொடுமை .



 நீங்கள் காதலிக்கிறீர்கள் ஒருவரை என்றால் அதை வீட்டில் சொல்லுங்கள் . அப்போது பெற்றோர் விசாரித்து நல்ல ஆளாக இருந்தால் நீங்கள் காதலித்தவரை உங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் தானே. நீங்கள் ஏன் வீட்டை விட்டு ஓடி போகிறீர்கள் .
நாலு பேர் நாலு விதமாக பேச ஏன் இடமளிகிறீர்கள். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்து இப்படி செய்தால் பெற்றோருக்கு தானே அவமானம் . உங்களுடைய சகோதரங்களுக்கும் அவமானம். வெளியில் எல்லோரும் சென்று ஒவ்வொரு விதமாக பேச நீங்கள் ஏன் இடம் அளிக்கிறீர்கள் ?

பெற்றோர் உங்களுக்கு நல்லது , கெட்டது எது என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .
காதலிப்பது தப்பில்லை . பெற்றோர் வெறுப்பதும் இல்லை . நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் . அதுவே அந்த நபர் பிரச்சனைக்கு உரியவராக இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளையை அவர்களுக்கு ஒப்படைக்க மாடார்கள் . ஏன் எனில் நமது பிள்ளையை ஏன் எப்படி கஷ்டப்பட வேண்டும் ? என்று நினைக்கிறார்கள் . அதிலும் தப்பில்லை தானே.

பிள்ளைக்கு ஒரு வயதில் என்ன செய்ய வேண்டும் ? பத்து வயதில் என்ன செய்ய வேண்டும் ? இருபது வயதை தாண்டியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் தானே . அவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் .
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் முதலில் நமது தாயும் , தந்தயும் தான் . அதற்கு பிறகு தான் மட்டவர்கள் எல்லோரும். அதனை மனதில் வைத்து கொள்ளவேண்டும் பிள்ளைகள்.

வயதானவுடன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து பாருங்கள் . அவர்களை கண்கலங்காமல் வைத்து பாது காப்பது பிள்ளைகளின் தலையாய கடமை . இப்போது எல்லோரும் தமது பெற்றோரை ஆச்சிரமங்கள் ,  பராமரிப்பு நிலையங்களில் விட்டு விடுகிறார்கள் . மாதாந்தம் பணம் அனுப்புகிறார்கள் .ம்ம்ம்ம்ம் பெற்றோர்கள் எவ்வளவு பாவம் .

எல்லோரும் இளமையாக இருந்து பின்பு முதியவர்கள் ஆவது தான் உலக நியதி . இதை எல்லோரும் உணர வேண்டும் .

பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் முக்கிய கடமை .

இறைவன் எமக்கு நேராக வந்து தரிசனம் தருவதில்லை .
வேறு ஒவ்வொரு வழிகளில் வந்து தான் எமக்கு அருள் பாலிக்கிறார் .





No comments: