Friday, June 18, 2010

படித்ததில் பிடித்தது

நான் வாசித்து எனக்கு பிடித்த கவிதையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் . இந்த கவிதைகளை எழுதியவர்களின்  பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன் . அவர்கள் இனிமையான கவிதையை எழுதியமைக்காக ..........கவிதைக்கு சொந்தக்காரர்களாக .........
                                          
அனாதையாய் நானும்

எழுதியவர் - அன்பன்

அனாதையாய் நானும்
ஆயிரம் உறவுகள் இருந்தும்
நீ இன்றி நானும்
கோடிக்கணக்கான நினைவுகள் இருந்தும்
உன் கனவுக்காய் நானும்
பேசத்தெரிந்த மொழி இருந்தும்
உன் விழிஅசைவுக்காய் நானும்
தேகத்தில் வலு இருந்தும்
உன் கரம்பிடித்து நடக்க நானும்
தீன் சுவை உணவுகள் இருந்தும்
நீ ஊட்டும் ஒருவாய் சோற்றுக்காய் நானும்
முத்தங்கள் ஆயிரம் குவிந்தாலும்
நீ தரும் முத்தங்களுக்காய் நானும்
பல பல பாச உறவுகள் இருந்தும்
நீ காட்டும் தூய்மையான பாசத்துக்காய் நானும்
காலமெல்லாம் காத்திருக்கிறேன்
உன் காலடியில் தவம் இருக்கிறேன்
என்னை உலகுக்கு தந்தவளே
என் அன்னையே உனக்காய் என்றும்
அனாதையாய் நானும்

http://s-ak.buzzfed.com/static/imagebuzz/2008/7/17/11/89c38dbec9f29eb995a6d63872196f02.jpg

அன்பே காதல் எங்கே ?

எழுதியவர் - சூட்டி

உன் கண்கள் எங்கே ?
என் கனவுகளை அங்கே
பார்ப்பதற்கு ........!
உன் இதழ்கள் எங்கே ?
என் ஆசைகளை அங்கே  
தீர்ப்பதற்கு ..........!
உன் மௌனம் எங்கே ?
என் வார்த்தைகளால்
மொழிபெயர்ப்பதற்கு ........!
உன் இதயம் எங்கே ?
என் உயிரை அங்கே 
சேர்ப்பதற்கு......!       
உன் காதல் எங்கே ?
என் கல்லறையிலாவது பூப்பதற்கு...
http://images.teamsugar.com/files/usr/0/3362/Big%20Love%20Pet%20Name.jpg

உண்மையான நேசம்

எழுதியவர் - உதயா
மல்லிகையில் மலர்ந்தவள்
என் மனதில் நிறைந்தவள்
உடலில் உறைந்தவள்
உயிரில் கலந்தவள்
என்னை உருக வைத்தவள்
மறந்து சென்றுவிட்டாள்
அவள் இன்று
உண்மையான நேசம் கொண்டு
உன்னை உண்மையாக நேசித்தவன் நானடி - இன்று
உலகில் வாழ்ந்துகொண்டு இருப்பதும்
உன் மேல் வைத்த நேசத்தோடு தானடி
உன் காதலை நீ எடுத்து சென்ற பின்பும்
உடைந்து போன காதலால்
வலி கொண்ட இதயத்தில்
ஒரு துளிகூட குறையவில்லை
உன்னில் உருவான என் காதல்
மனதில் இருப்பவளே
மறந்து சென்றிருக்கலாம் நீ என்னை
மறக்கவில்லை நான் உன்னை
மறப்பதென்பது என்றும் என்னில் இல்லை
மரண படுக்கை செல்கையிலும்
மனதார நேசிப்பேன் நான் உன்னை
http://emywinchester.files.wordpress.com/2008/11/the_girl_and_boy_______________by_yuribonder.jpg
 

9 comments:

Sivatharisan said...

மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்

Anonymous said...

mmmmmmmm nalla irukku


suba

Pavi said...

நன்றி சிவதர்சன்

Pavi said...

நன்றி சுபா

Praveenkumar said...

அனைத்து கவிதைகளும் மிக அருமை..! எழுதிய அனைவருக்கும் பாராட்டுகள்..! எங்களை போன்ற வாசகர்களிடம் இதுபோன்ற சிறந்த கவிதைகளை பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றி.!

Karthick Chidambaram said...

Mika azhagana varigal. Neengal matravargalukku veli amaiththu koduppathu pidiththu ullathu. Vaalthukkal sogathari.

Pavi said...

நன்றி பிரவீன் .
நல்ல கவிதைகள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் . எழுதியவர்களுக்கும் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என்ற நோக்குடன் எல்லோரிடமும் பகிந்து கொண்டேன்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் இந்த வாழ்த்துக்களை தான் நான் எதிர்பார்க்கிறேன் எல்லோரிடமும் இருந்து .
நன்றி கார்த்திக் . இன்னும் நல்ல கவிதைகளை பகிர்ந்து கொள்வேன்

Shahani said...

Really Superb akka