Friday, December 17, 2010

குழந்தாய் குழந்தாய் தவமின்றி கிடைத்த வரமே

குழந்தைகளின் அழுகை , சிரிப்பு , நித்திரை என அவர்கள் செய்யும் செயல்கள் எல்லோரையும் ரசிக்கும்படியும் , சந்தோசமாகவும் இருக்கும் எமக்கு பார்க்கும்போது . அவர்கள் என்ன செய்தாலும் கோபம் வராது . அதனை ரசித்து கொண்டு இருப்போம் . அதுபோல் தான் குழந்தைகள் நித்திரை கொள்ளும் போது என்ன அழகாக நித்திரை செய்கிறார்கள் என்று பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது . நீங்களும் பார்த்து மகிழுங்கள் .

The image “http://cdn.sheknows.com/articles/sleeping-baby.jpg” cannot be displayed, because it contains errors.
பால்மணம் மாறாத 
பிஞ்சடா 
ஏதடா கவலை ..........

http://www.babycentre.co.uk/i/podcasts/UK_en/pictures/sleeping-baby-l.jpg
சோகமில்லை , துன்பமில்லை, 
தூங்க நேரமில்லை இந்த 
வயதில்  , பொழுதை விட்டால் .......

http://thefurnitureconsultinggroup.com/baby_sleep.jpg
அழுகை இல்லை 
சத்தம் இல்லை 
குழப்படி இல்லை 
தூங்கடா கண்ணா கண்ணா 

http://www.askamum.co.uk/upload/17444/images/10000006.jpg
மனம் தூய்மை 
உடல் தூய்மை 
பேச்சு தூய்மை 
அது இந்த சிறிய 
பருவத்தில் மட்டுமே 

http://www.lifeclever.com/wp-content/uploads//2008/05/nap-450x358.jpg
பொறாமை இல்லை 
வஞ்சனை இல்லை 
தீய பழக்கங்கள் இல்லை 

http://kidsandteensblog.info/wp-content/uploads/2009/11/sleepingbabyboy.jpg
கண்ணா தூங்கு 
நாட்கள் கிழமைகள் ஆகி 
கிழமைகள் மாதங்கள் ஆகி 
மாதங்கள் வருடங்கள் ஆகி 
உனது வயதும் கூடி கொண்டு போகும் 
நீ இந்த உலகில் பெரியவன் 
ஆவாய் அப்போது உனக்கு நித்திரை செய்ய 
கூட நேரம் இருக்காது 
இப்போது வடிவாக தூங்கு ....

http://www.sleep-aid-tips.com/images/help-your-baby-establish-healthy-sleep-habits-21302691.jpg
உங்களது மழலை சிரிப்புக்காக 
தவம் இருப்போர் எத்தனை பேர் 
அந்த வரம் கிடைப்போர் எத்தனை பேர் 
அதையும் தாண்டி தாய் 
எவ்வளவு கஷ்டப்படுகிறாள் 
அத்தனையும் தாண்டி 
உங்களது மழலை சிரிப்பில் 
ஆனந்தம் அடைகிறாள் 
எல்லா துன்பங்களில் இருந்தும் 
உங்களது தாய் ....