Monday, December 17, 2012

2012............2012......



ஒவ்வொரு ஆண்டும் வந்து போகிறது 
எமது வயதும் ஒவ்வொன்று கூடுகிறது 
எல்லா ஆண்டும் போல  இவ்வாண்டு 
இல்லையே என ஏங்குகிறோம் 
அல்லவா ? இந்த ஆண்டு முடியும் 
தறுவாயில் ஒரு பெரிய குண்டை 
தூக்கி போட்டு இருக்கிறார்கள் 
உலகம் அழியப் போகிறது என்ற 
பீதியை அல்லவா ? 

யாரை பார்த்தாலும் இதே கேள்வி ,
இதே பயம் அல்லவா தொற்றிக் கொள்கிறது 
இதென்னடா அநியாயம் என்று 
மனம் ஏங்குகிறது அல்லவா ?
சிலருக்கு மரண பயம் கூட ஏற்பட்டு 
விட்டது , சிலரோ பயப்பிடவே இல்லை .
எப்போதோ ஒருநாள் மரணம் நிச்சயம் 
அது எப்போது வந்தால் என்ன என்கின்றனர் 
இப்படி எல்லோராலும் இருக்க முடியுமா 
இல்லையே - இறைவா இது என்ன சோதனை .

உலகம் அழியாது பயப்பிட வேண்டாம் 
என்றால் கூட ஏதோ ஒரு பயம் நம் 
எல்லோரையும் ஆட கொள்கிறது தான் .
சரி 21 ஆம் திகதி நெருங்குகிறது தானே 
என்ன நடக்கிறது என்று பொறுத்திருப்போம் .

No comments: