Saturday, October 24, 2009

சிறந்த நடிகர் விருது பிரகாஷ் ராஜுக்கு






நல்ல சிறந்த நடிகர் , வில்லன்  என பல பரிணாமங்களில் தனது நடிப்பின் மூலமாக எல்லோரின் மனங்களை கவர்ந்தவர் பிரகாஸ் ராஜ் . எனக்கு அவரை மிகவும் பிடித்தது ஆசை படத்தில் . நன்றாக நடித்து இருந்தார். பின்பு  கில்லி , மொழி என பல படங்களை சொல்லி கொண்டு போகலாம் .

ரகுபரனுக்கு பிறகு எனக்கு பிரகாஷ் ராஜ்யை மிகவும் பிடித்தது . வில்லன் என்றால் தாடி வளர்த்தும் , பெரிய குண்டு உடம்புடன் பலம் காட்டுபவர்கள் மத்தியில் பிரகாஷ் ராஜும் , ரகுபரனும் ஒரு தனி பாதையில் நின்று அசத்துபவர்கள் .                                                                                     


                                            


நான் சொல்வது 90 களுக்கு பிறகு. ஏனெனில்  90 களுக்கு முதல் பலர் இப்படி இருந்தார்களோ , இல்லையோ என்பது பற்றி எனக்கு தெரியாது . நான் அதற்கு பிறகு தான் பல படங்கள் பார்த்து இருக்கிறேன் .

பல நல்ல படங்களை தயாரித்தும் இருக்கிறார் நம்ம பிரகாஷ் . அவர் இன்னும் பல படஙகளில் நடிக்க வேண்டும் . பல விருதுகள் அவருக்கு சொந்தமாக வேண்டும் என்பதே எனது அவா .



அதுபோல் 2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜ்  இந்தியாவின் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார் .
காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.


காஞ்சி ஏழை நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, யதார்த்தமாக இந்த படம்  இருந்தது . பிரகாஷ் ராஜின் யதார்த்த நடிப்பில், இயல்பான கதையை சொன்ன தமிழ் படமான 'காஞ்சிவரம்' சிறந்தப் படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படம்,  சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக சித்தரித்திருந்தது.




 
55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7- ஆம் திகதி  அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், அகில இந்திய அளவில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.


பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடமிருந்து பலத்த கைதட்டலுடன் பெற்று கொண்டார். இந்த விருதுகள் தான் இன்னும் இவர்களை உற்சாகம் ஊட்ட கூடியவை .

 
தேசிய அளவில் இரண்டாவது முறையாக விருது பெறுகிறார் பிரகாஷ் ராஜ். கடந்த 1998ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'இருவர்' படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ஏற்கனவே பெற்றவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் சிறப்பு ஜூரி விருதும் பெற்றவர்.

பிரகாஷ் ராஜ் இன்னும் பல விருதுகள் பெற வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன் .

 


4 comments:

புலவன் புலிகேசி said...

விருதுக்குத் தகுதியான நடிகர்..........

Anonymous said...

thakuthi pirakashukku undu .
kidaiththu irukkirathu.
nalla timukku intha pathivaum poddu irukkireerkal.

akila said...

kanchivaram super film.
prakash rajaal thaan ippadi nadikka mudium.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம். நன்றி வந்தி அண்ணா.
புலவர் அண்ணா .