Monday, November 23, 2009

எனக்கு பிடித்த வரிகள் - பழைய பாடல்களில் இருந்து -1

அந்த காலத்தில் வந்த பாடல்கள் எல்லாம்  நல்ல பாடல்கள் , நல்ல வரிகள் , எல்லோருக்கும் புரியும் படியும் , விளங்கும் படியும் பாடல்கள் இருக்கும் . பாடல்களில் அர்த்தம் இருக்கும் . பாடுபவர்களும் பாடல்களுக்கு உயிர் கொடுத்தது போல பாடி இருப்பார்கள் . 

அந்த காலத்து ஆட்களை கேட்டால் சொல்வார்கள் இப்ப வருவதெல்லாம் பாட்டா ? அதில் என்ன புரிகிறது ? என்று கேட்கிறார்கள் . நீங்கள் வேணும் என்றால் அந்த காலத்து பாடல்களை கேட்டு பாருங்கள் என்று சொல்வார்கள் .

ம்ம்ம்ம் இப்போ வருகிற பாடல்கள் எல்லாம் நம்ம யூத்துக்கு எத்த மாதிரி இருக்கு என நாம் சண்டை போடுவதுண்டு . ம்ம்ம் அந்த காலத்து பாடல்களில் அர்த்தம் உள்ளது . நல்ல கருத்துக்கள் உள்ளன தான் . அதை இல்லை என்று சொல்லவில்லை . இப்போது வரும் பாடல்களில் சில பாடல்களில் நல்ல வசன நடை , நல்ல அர்த்தங்கள் உண்டு தான் .

சரி . இப்போது பழைய பாடல்களில் இருந்து நல்ல வரிகள் , எனக்கு பிடித்த வரிகளை என்னுடைய தளத்தில் இட்டுள்ளேன். எல்லோரும் பாடல்கள் கேட்டு இருப்போம் . ஆனால் வரிகளை வாசிப்பது குறைவு . என்னுடைய தளத்தில் வந்து வாசிங்கள் . உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .



காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

  
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்


எண்ணும் எழுத்தெனும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புதுமை ஆற்றல் தந்தாய்
ஐயந்தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி 


    
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி



 


 பின்னிய கூந்தல் கருனிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்...அது என் யோகம்

 


ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்


  
பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

 '
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த ...
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா



அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா


    
தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தை இல்லை
கண் திறந்த நேரமுதல் கைகொடுத்த தெய்வமன்றோ
அதன் பஎர் பாசமன்றோ
கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பெயர் பாசமன்றோ




வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்


 
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ...



  

2 comments:

malarvizhi said...

fantastic lyrics. very nice

Anonymous said...

super..............



a.t.m