Sunday, January 10, 2010

என்ன அருமையான பாடல்

 நல்ல வரிகள் , அருமையான பாடல் . கேக்கும் போதும் அழகாய் இருக்கின்றது . அதன் வரிகளும் எல்லோருக்கும் புரியும்படி அழகாய் இருக்கிறது அல்லவா ? எனக்கு அண்மையில் வந்த பாடல்களில் இந்த பாடல் மிகவும் பிடித்தது . ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
. உண்மையான வரிகள் , நியமானவை.




அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

//அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே//

எனக்கும் பிடித்த பாடல்....

ஞானப்பழம் said...

உங்கள் ரசனையை ரசிக்கிறேன்!! எனக்கும் தமிழ் வரிகளுடன் பாட்டு கேட்க பிடிக்கும்!!!

புலவன் புலிகேசி said...

நல்ல பாடல் தான்

Pavi said...

ம்ம்ம்ம் எல்லோருக்கும் பிடித்த பாடலும் கூட
உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

ஞானப்பழம் said...

பழைய, இளையராஜா/வைரமுத்து பாடல்களை கேட்பதுண்டா? தமிழ் வரிகளும் இசையும் மிகவும் அருமையாக இருக்கும்... இசையோடு ஒன்றிவர, தமிழைப் போல் ஒரு மொழி இல்லை எனவே தோன்றுகின்றது!!

ஞானப்பழம் said...

"பாத கொலுசு பாட்டு.." , "ஆலப்போல் வேலப்போல்..." இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளது!! கோடி புண்ணியம் பண்ணியிருக்கணும், இப்படிப்பட்ட பாடல்கள் கேட்பதுக்கு!!