Wednesday, January 13, 2010

தைத்தாயே வருக

Pongal Kalash 
தைத்திருநாள் எப்போது
வரும் என காத்து
இருந்தோம் தாயே
வருக தைத்தாயே
நாம் பட்ட கஷ்டங்கள்
நீங்க வேண்டும் 

Pongal Harvest 
எல்லோரும் சந்தோசமாக
வாழ வேண்டும்
எல்லோரும் அன்புடனும்
பண்புடனும் இவ்
வையத்துள் வாழ வேண்டும்
தாயே அதை தான்
நான் வேண்டுவது 



தை பிறந்தால்
வழி பிறக்கும்
என்று சொல்வார்கள்
எமது மக்களுக்கு
விடிவு பிறக்க வேண்டும்
வாழ்வு சிறக்க வேண்டும்
கவலைகள் தீர வேண்டும்
துன்பங்கள் குறைய வேண்டும்
வாழ்வில் சந்தோசம் உண்டாகி
வாழ்வில் புது வசந்தம் உண்டாக
வேண்டும் தாயே
அதை தான் நாம்
உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கின்றோம்
தை தாயே ..............

10 comments:

Jackiesekar said...

தை தாய் அனைத்து விதமான முன்னேற்றங்களையும்,மன காயங்களையும், எம் இன மக்களுக்கு அதிக பலத்தையும் கொடுத்து உதவுவாள் என்று நானும் வேண்டிக்கொள்கின்றேன்....

அன்புடன் நான் said...

கவிதையின் எண்ணம் ஈடேரும்... பொங்கல் வாழ்த்துகள்.

Pavi said...

தை தாய் அனைத்து விதமான முன்னேற்றங்களையும்,மன காயங்களையும், எம் இன மக்களுக்கு அதிக பலத்தையும் கொடுத்து உதவுவாள் என்று நானும் வேண்டிக்கொள்கின்றேன்....


அதுதான் என் வேண்டுதலும்
நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்

Pavi said...

நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் கருணாகரசு .

தமிழ் said...

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

Pavi said...

உங்களுக்கும் உரித்தாகட்டும் திகழ்.

அண்ணாமலையான் said...

நல்லது நடந்தா சரி (நீங்க பைக் வேகமா ஓட்டுற ஆளோ?)

sathishsangkavi.blogspot.com said...

//தை பிறந்தால்
வழி பிறக்கும் //

நிச்சயம் பிறக்கும் பவி

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பவி...

ஞானப்பழம் said...

தை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

Pavi said...

எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே .