Monday, February 22, 2010

சிந்தனைக்கு

நெருப்பு பொன்னைச் சோதிக்கிறது . துயரம் உயர்ந்த மனிதர்களைச் சோதிக்கிறது .

ஒவ்வொரு முடிவும் மற்றொன்றுக்கான தொடக்கம் .

தவறுகளை ஏற்கவும் திருத்தவும் தேவை தைரியம் .

ஆயுளை நிர்ணயிப்பது செயல்கள் , ஆண்டுகளல்ல .

நேற்றை விட இன்று வளர்ந்தோம் என்ற நம்பிக்கையே வெற்றி .

நண்பர்கள் மனிதனின் குணத்தை காட்டும் கண்ணாடிகள் .

எளிதில் சம்பாதிக்க முடிவது எதிரிகளை மட்டும் தான் .

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் அதிகம் சாதிக்கலாம் .

உன்னுடைய பிரச்னைக்கு நீயே தீர்வு .

ஒரு நல்ல சிந்தனையே பல நல்ல செயல்களாக மாறும் .

1 comment:

Anonymous said...

............super pavi. asaththunka.