
படம்: அவள் வருவாளா
பாடல்: இது காதலின் சங்கீதம்
ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே
சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது

படம்: லவ் டுடே
பாடல்: என்ன அழகு
நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

படம்: அன்பே ஆருயிரே
பாடல்: வருகிறாய் தொடுகிறாய்
தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

படம்: தெனாலி
பாடல்: சுவாசமே சுவாசமே
இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திட செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம்தான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விழுந்துவிட்டேனே

படம்: சேவல்
பாடல்: துளசி செடிய
ஓ வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்தின
சேவலைப்போல் திரிஞ்ச என்ன ஊர்க்கோழியா ஆக்குன
கட்டுத்தரி காளை போல காலம் பூரா சுத்துன
வெட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்
ஒத்த வார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே
மொத்தமாதான் என் நெனப்ப மூடிவச்சி நின்னியே
சொடலைமாட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்
ஒம்மனசு காயப்படக்கூடாதுன்னு தள்ளுனேன்
என் வயசு உன்னை பார்க்காமே குறைஞ்சிருமே

படம்: ஆதி
பாடல்: ஒல்லி ஒல்லி
ரெட்டை ஜடை பல்லக் கொண்டு நடக்குதே நடிக்குதே இடிக்குதே
அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சு வந்து
நின்னு தந்திரிச்சு முத்தம் என் நெஞ்ச தொடுதே
ஹேய் கமரங்கட்டு கண்ணங்கள கடிக்கட்டா கடிச்சித்தான்
2 comments:
mmmmm nalla varikal.
vino
superrrrrrrrrrr
kamal
Post a Comment