ஒரு மாலை இளவெயில்
நேரத்தில் அவனை நான்
கண்டேன் - அவனோ
என்னை பார்க்கவில்லை
அவன் வேறெங்கோ
பார்த்த வண்ணமாக
வீதியின் ஓரமாக
சென்று கொண்டிருந்தான்
நானோ இக்கரை
அவனோ அக்கரை
கண் சிமிட்டாது
அவனை நான் உற்று
பார்த்த வண்ணமே
நின்று கொண்டிருந்தேன்
அவனோ பார்ப்பதற்க்கு
கம்பீரமாகவும் அழகானவனாகவும்
இருந்தான் - எங்கே
உற்று பார்த்த வண்ணமே
இருக்கிறான் என்று
நான் சிறிது நேரம்
யோசித்துவிட்டு நிமிர்ந்து
பார்த்தேன் அவனை
காணவில்லை - எங்கே
என்று நாலுவளமும்
திரும்பி பார்த்தேன்
அவன் ஒரு பொலிஸ் ஜீப்பில்
போய் கொண்டு இருந்தான்
என்னவென்று விசாரித்தேன்
அவன் ஒரு கொள்ளைகார
கும்பலின் தலைவனாம்
என்று அங்கு கூடி
இருந்த மக்கள் பேசி
கொண்டு இருந்தார்கள் .
ம்ம்ம்ம்ம்ம் இதென்னடா
இப்படி உடம்பை கட்டுகோப்பாக
வைத்து கொண்டு இப்படி
கொள்ளை அடிப்பது தானா
இவனின் தொழில் என
நல்ல காலமடா சாமி
கொஞ்சம் அசந்திருந்தால்
நம்மட பணம் , நகைகள்
போய் இருக்குமே
தப்பினோம் , பிழைத்தோம்
என்ற வண்ணமாக
நான் எனது நடை
பயணத்தை தொடங்கினேன் ........
எப்பிடி இருக்கு இந்த கவிதை . எனது நண்பிக்கு நடந்த சம்பவத்தை எனக்கு கூறினார் . அதை நான் கவிதை வடிவமாக இங்கே தந்துள்ளேன் . ஒருவரை நாம் நல்லவரா , கெட்டவரா என ஒரு நொடிப்பொளிதில் அறிவது கஷ்டம் . தீர விசாரித்து தான் எந்த விடயம்களிலும் இறங்க வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன் . என் நண்பிக்கு அறிவுரையும் வழங்கினேன் .
4 comments:
வணக்கம் உறவே
உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..
நன்றி
வலையகம்.கொம்
www.valaiyakam.com
கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!
நன்றி வலையகம்
உங்கள் வரவேற்புக்கு
நன்றி சொப்ட்
Post a Comment