Thursday, August 12, 2010

கடற்கரையில் ஒரு மணல் வீடு


அழகாக ஒரு மணல்
வீடு ஒன்று கட்டினேன்
அதில் அழகான
ஜன்னல்கள்
அழகான கூரை

வீடு அழகாக
மணலில் அழகாக
கட்டி முடித்தேன்

அலைகள் வந்து
வந்து போயின
எனினும் எனது
மணல் வீடு
அப்படியே இருந்தது

அந்த மணல் வீடை
அழகாக ரசித்து கொண்டு
இருந்தேன் கொஞ்சநேரம்
நானும் என் நண்பியும்

இப்படி ஒரு வீட்டை
நாம் நமது உழைப்பில்
கட்டினால் எவ்வளவு
ஆனந்தமாக இருக்கும்
என யோசித்து கொண்டோம்
http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/1e/58/fc/the-sea-really-is-that.jpg
அலைகள் நேரம் செல்ல
செல்ல அதிகமாக
அடித்தது - எனது
மணல் வீட்டை வந்து
தொட்டு தொட்டு
சென்று கொண்டு
இருந்தது .

ஐயோ இன்னும் சிறிது
நேரத்தில் எனது
மணல் வீட்டை
அலை கொண்டு
போகப்போகிறதே என
யோசித்து கொண்டேன் .

நண்பி சொன்னாள்
அதோ பெரிய அலைகள்
வந்து கொண்டு இருக்கிறது
உனது மணல் வீட்டை
அடித்து செல்ல போகிறது
என்று நண்பி கூறிய
சில வினாடிகளில்

எனது மணல் வீடு
அலைகளால் அடித்து
செல்லப்பட்டது ஐயோ
கடவுளே ..............என்று எனது
மனதை நொந்து
கொண்டேன் - அலைகள்
அடித்து கொண்டு
செல்லும் என
தெரிந்தும் எனது
மனம் கேட்கவில்லை
.


எல்லோரது எதிர்பார்ப்பும்
நிறைவேறுவதில்லை
சில எதிர்பார்ப்புகள்
நிறைவேறுகின்றன........

7 comments:

Praveenkumar said...

எங்கோ கேட்ட வரிகளாய் இருந்தாலும்... உங்களது எழுத்தில்.. யதார்தமான வரிகள்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல இருக்குங்க...தொலைந்து விடும் என்று தெரிந்தும் தேடிப் பிடிப்பது போல...

'பரிவை' சே.குமார் said...

நல்ல இருக்குங்க...

Pavi said...

நன்றி பிரவின்குமார்

Pavi said...

நன்றி வெறும்பய

Pavi said...

நன்றி குமார்

Parthasarathy said...

Very nice............