Tuesday, December 14, 2010

மரணத்தின் விளிம்பில் அவள்

http://2.bp.blogspot.com/_9vfe46xMdGg/R3ZscGn9IxI/AAAAAAAAAFA/9tGB-SIS0mU/s320/thedarkone12_crying_girl.jpg

அவள் ஒரு தேவதை 
போல் இருப்பாள் 
அவளை பல ஆண்கள் 
காதலிக்க துடித்தனர் 
ஆனாலும் , அவள் 
விருப்பம் என்னவோ 
என்னவோ என 
ஏங்கிய ஆண் உள்ளங்கள் 
அதிகம் - எனினும் 
அவள் யாரையும் 
காதலிக்கவில்லை - இருந்தும் 
அவள் பின்னால் எப்போதும் 
ஆண்கள் கூட்டம் தான் 
அவள் அவர்கள் யாரையும் 
கணக்கெடுப்பதுமில்லை, திரும்பி 
அவர்கள் முகத்தை பார்த்தது 
கூட இல்லை - எல்லா 
ஆண்களும் இவள் ஒரு 
அகந்தை பிடித்தவள் , கோபக்காரி ,
சிடுமூஞ்சி , பெரிய அழகி 
என்ற நினைப்பு அவாக்கு என்று 
குமுறி குமுறி தமது 
நண்பர்களுடன் முறை இட்டனர் .
அவளை பற்றிய உண்மை 
தெரிந்ததும் அவர்கள் எல்லோரும் 
வேதனை பட்டனர் , அழுதனர் 
கண்ணீர் , கண்ணீராய் சொரிந்தனர் 
அதுதான் அவளுக்கு வந்திருக்கும் 
நோய் பற்றியது தான் அந்த சம்பவம் 
அவள் தனது சாவை , இறப்பை எண்ணிக் 
கொண்டிருக்கிறாள் - அவளுக்கு இருப்பதோ 
http://divyanovel.files.wordpress.com/2008/12/crying-girl.jpg
ஒரு தீராத வியாதி , வைத்தியர்கள் 
எல்லோரும் கைவிருத்து விட்டு விட்டார்கள் 
அதனால் தான் அவளுக்கு 
அவள் மீது வெறுப்பு , இந்த 
உலகின் மீது வெறுப்பு 
இந்த வாழ்க்கை மீதே வெறுப்பு 
ஆண்கள் மீது வெறுப்பு , இப்படி 
எல்லாவற்றின் மீதும் வெறுப்பு 
ஏற்பட காரணம் 
அவள் தான் என்ன செய்வாள் ?
இது யார் குற்றம் ?
தாய் குற்றமா?
தந்தை குற்றமா? 
அல்லது படைத்த இறைவன் 
மீது குற்றமா ?
http://www.freewebs.com/pavu56/GIRL_CRYING_HOMESTEAD_POEM_JPG.jpg
விதி என்பதா? மதி என்பதா?
இது என்னடா உலகம் .........

1 comment:

Kavithini Raj said...

roppa nalla irukku ana manasukku kadamavum irukku...