Friday, January 28, 2011

கண்ணு கண்ணு

http://www.inkycircus.com/photos/uncategorized/2007/04/25/eye.jpg

கண்ணெதிரே தோன்றி 

கண்ணெதிரே தோன்றி 
மறைந்தாள் என் காதலி 
அவள் கணவனுடன் 
நான் அவளை நினைத்து 
ஏங்கியவனாய் இங்கு 


கண்களில் நீர் வழிந்து

கண்களிலே நீர் ததும்பி 
ததும்பி ஓட எனது காதலியின் 
இழப்பை தாங்க முடியாமல் 
மயானத்திலே நின்று கொண்டு இருக்கிறேன் 
அவளுக்கு வந்த தீராத நோய் 
எனக்கும் வந்து நானும் 
அவளுடன் இறப்பிலாவது 
ஒன்று சேர்வதற்காக காத்து 
இருக்கிறேன் என் இறப்புக்காக .....
http://root.kevinmillsphoto.com/images/Eyes/original_eyes.jpg

கண்ணே என் கண்ணே 

கண்ணின்  மணி போல் 
காப்பேன் என்று சொன்னேன் 
என் கண்ணில் நீரையும் 
காயத்தையும் உண்டாக்கி 
சென்று விட்டாளே அவள் ........


கண்கள் பேசுகின்றன 

அவள் கண்கள் என்னை பார்க்க 
எனது கண்களும் அவளை நோக்க 
இருவரது பார்வையும் காதல் 
பார்வை பார்த்த வண்ணம் 
கண்கள் பேசி இருவரும் 
காதலர்களாகி கல்யாணத்தில் 
முடிந்தன ................
http://michelemiller.blogs.com/marketing_to_women/eye.bmp
கண்ணுக்கு கண்ணாக 

இருவரும் காதல் திருமணம் 
செய்தோம் - சந்தோசமாக 
இருக்கிறோம் - அவர் என்னை 
கண்ணுக்கு கண்ணாக 
கவனிக்கிறார் - எனக்கு 
என்ன குறை ???

2 comments:

சக்தி கல்வி மையம் said...

கவிதை அருமை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

Pavi said...

நன்றி கருன்