Monday, July 4, 2011

சிறப்பாக நடைபெற்ற கார்த்தியின் திருமணம்

Karthik Sivakumar and Ranjani Wedding
தமிழர் மரபுப்படி திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் முழங்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார் கார்த்தி. நடிகர் கார்த்தி, ரஞ்சனியின் திருமணம் இன்று மிகவும் வெகு சிறப்பாக நடை பெற்றது . கோவையில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது . காலை 6.35 மணிக்கு மணமகனின் தந்தை நடிகர் சிவகுமார் தாலியை மணமகன் கார்த்தி கையில் எடுத்துக் கொடுத்தார். அவர் மணமகள் ரஞ்சனி கழுத்தில் அணிவித்தார். Karthik Sivakumar and Ranjani Wedding
நடிகர்கள் பிரபு, ராஜேஷ், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சித்தார்த், சரவணன், நடிகைகள் ராதிகா,நக்மா, பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி . உதயகுமார், ஹரி, சங்கர் தயாள், மனோபாலா, பாலா, சுசீந்திரன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, பாரதி வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், டாக்டர். தங்கவேலு, கோவை மணி, திருப்பூர் பாலு ஆகியோர் வாழ்த்தினார்கள்.

Karthik Sivakumar and Ranjani Wedding

சென்னையில் நடக்கும் வரவேற்பு விழாவில் ஏராளமான நட்ச்சத்திரங்களும் , முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது . புது மாப்பிளை கார்த்திக்கு எமது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ எமது பிரார்த்தனைகளும் . 
Karthik Sivakumar and Ranjani Wedding

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவர்கள் இல்லற வாழ்வில் இனிமை காணட்டும்...

'பரிவை' சே.குமார் said...

பவி...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
நிறைய நல்ல பதிவுகளை எழுதுங்கள்... சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் எதற்கு? (மனதில் பட்டதை சொன்னேன்)

Pavi said...

நன்றி சௌந்தர்

Pavi said...

எல்லாவகை பதிவுகளும் இடம்பெற வேண்டும் . நல்ல பதிவுகள் , வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை போட்டால் ஒருவரும் வாசிப்பதாக தெரியவில்லை . எந்த பதிவுகளை விரும்பி படிக்கிறார்களோ அவற்றை இடைக்கிடை போட்டால் தான் நண்பர்களும் தளம் வந்து போவார்கள் . அதனால் தான் இப்படி எல்லாம் . வேறொன்றும் இல்லை .
நன்றி உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் குமார் .

இராஜராஜேஸ்வரி said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.