Wednesday, December 14, 2011

இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?


http://owcnblog.files.wordpress.com/2011/01/happy-new-year-2011_32593.jpg
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நல்லது , கெட்டது என ஏதாவது நடக்கும் . சிலருக்கு அதிஸ்டம் அடித்து சந்தோசமாக இருந்திருப்பார்கள் . சிலர் நட்டம் அடைந்து பொருள், பண்டங்களை இழந்திருப்பார்கள் . இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதாவது நன்மை , தீமை நடந்திருக்கும் .

இந்த ஆண்டு நண்பர்களே உங்களுக்கு எப்படி அமைந்தது ? உலகில் ஒவ்வொரு நாளும் சாதனைகள் , கவலையான சம்பவங்கள் , அழிவுகள் , ஆர்ப்பாட்டங்கள் , கண்டுபிடிப்புகள் என ஏதாவது நடந்து கொண்டு தான் இருக்கின்றன .

இந்த நவீன யுகத்தில் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பது என்பது கஷ்டமான நிலைமையாக இருக்கிறது . தினம் தினம் குடும்ப பிரச்சனை , அயல் வீட்டில் பிரச்சனை , உறவுகளில் விரிசல் , கணவன், மனைவி சண்டை , பிள்ளைகளால் குழப்பம் என்று பிரச்சனைகள் கூடிக் கொண்டே செல்கின்றன .
http://www.kern-photo.com/wp-content/uploads/2011/08/wpid-bad_medicine_lake_photography-2011-08-5-12-47.jpg
போன ஆண்டு ஏற்பட்ட வலிகள் , துன்பங்கள் இந்த ஆண்டு இருக்கக்கூடாது என நாம் ஒவ்வொரு ஆண்டும் துன்பங்களை மறந்து சந்தோசமான நிகழ்வுகளை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறது . எப்படி ஒரு ஆண்டு முடிவடைந்தது என்று எண்ணுகிறோம் . உடனே ஓராண்டு பிறந்து முடிந்து விட்டது என எண்ணத்தோன்றுகிறது அல்லவா நமக்கு ?

நிறுவனங்களில் இலாபம் அடைந்தவர்கள் ஐயோ இந்த ஆண்டை போல அடுத்த ஆண்டு இதை விட இலாபம் உழைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . நட்டம் அடைந்தவர்கள் ஐயோ இந்த ஆண்டை போல இல்லாமல் அடுத்த ஆண்டிலாவது இலாபம் பெற வேண்டும் என்று எண்ணுவார்கள் . இப்படி இருக்கிறது உலகம் .

அதே சுபகாரியங்களில் ஈடுபட்ட குடும்பங்கள் குழந்தை இந்த ஆண்டில் பிறக்க வேண்டும் , சந்தோசமாக குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டும் , சந்தோசமாக , ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் . கல்யாணம் செய்யாதவர்கள் இந்த ஆண்டிலாவது எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் . இப்படி எண்ணி இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு எப்படி அமைந்தது ?

சில முக்கிய வைபவங்கள் நிகழ்ந்திருக்கும் . சந்தோசமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் . நீங்கள் நீண்டநாட்கள் காணாதவர்களை இந்த ஆண்டு சந்திக்க நேர்ந்திருக்கும் . உங்களுக்கு எப்படி அமைந்தது இந்த வருடம் ? சிலருக்கு அவர்களின் குடும்ப முக்கிய உறுப்பினர்களை இழந்திருப்பர் . அவர்களுக்கு இந்த ஆண்டு துன்பகரமான ஆண்டாக அமைந்திருக்கும் .
http://3.bp.blogspot.com/_ZU5YIbowhZU/TR5oR3tHfFI/AAAAAAAABAo/-DUFWPG0Ptc/s1600/happy-new-year-2011-t-shirts_design.png
சரி எனக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டு என்றும் சொல்ல முடியாது . சரியில்லை என்றும் சொல்ல முடியாது . மொத்தத்தில் பருவாயில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது . கோவில் தரிசனம் கூடுதலாக இந்த ஆண்டு கிடைத்தது . பல கோவில்களுக்கு சென்று வந்தேன் . இன உறவுகளோடு சந்தோசமாக போய் வந்து சந்தோசமாக இருந்தேன் . 

கையில் பணம் இல்லை என்று ஒருநாள் கூட இருந்ததில்லை . எப்போதும் அதுக்கு குறைவில்லை . சுபகாரியங்கள் என்று பார்த்தால் இந்த ஆண்டு அப்படி எதுவும் நிகழவில்லை . சரி பாப்போம் . அடுத்த ஆண்டு எப்படி அமைகிறது என்று ? நல்லகாலமாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு . நம்பிக்கை தான் வாழ்க்கை . ம்ம்ம்ம் சரி என்ன நடக்கிறது என்று பாப்போம் .

நண்பர்களே உங்களுக்கு எப்படி இந்த ஆண்டு இருந்தது ? அடுத்த ஆண்டு உங்களது பிளான் என்ன ?

No comments: