Friday, April 9, 2010

படித்ததில் பிடித்தது




நான் படித்து சுவைத்ததை , எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . வாசித்து பாருங்கள் . அருமையான கவிதைகள் . 

http://farm2.static.flickr.com/1016/1182205597_69bcd24ba2.jpg 

நட்பாகவே இருப்பதுதான் 

நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்.

http://www.simply-speaking.co.uk/images/confidence-coaching-pic.jpg

தன்னம்பிக்கை 

பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம்..
நீ தானேயடா,
ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று...!!

http://z.about.com/d/cameras/1/0/W/2/LoversSun.jpg

எப்போது சொல்வாய்................. 

ஒரு பார்வையால்
ஒராயிரம்
கதை சொல்லி
என்னை பதறவைக்கும்
உன் கண்கள் பிடிக்கும்

நிலவுக்குள்

மின்னலடித்தது போல்
என்னை நோக்கி
நீ வீசும் உன்
புன்னகை பிடிக்கும்

நள்ளிரவில் தெரியும்

நட்சத்திரமாய்
உன் கூந்தலில்
ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றை ரோஐh
பிடிக்கும்

ஆயிரம் பேருக்கு

மத்தியில்
நீ வந்தாலும்
உன்னை எனக்கு
உணர்த்தும்
உன் கொலுசின் ஒலி
பிடிக்கும்

http://pascalg.files.wordpress.com/2007/10/katie-melua-small.jpg

நீ என் கனவில் வந்தாய் 

நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது

http://www.firstscience.com/home/images/legacygallery/life_12weeks.jpg

வாழத் தொடங்கினேன் 

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...

http://fc06.deviantart.net/fs23/f/2008/006/a/f/DN__LightxL_My_first_friend____by_gothic_anomie.png

நம் நட்பின் முதல் நாள் 

இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்

http://fresh.cinesnacks.in/wp-content/uploads/2009/08/pokkisham-stills-063.jpg

காதல் தோல்வி  


காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள் அல்லது
பிணமாக வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும் உயிரோடு !!

http://farm3.static.flickr.com/2105/1677815178_9afceeacac.jpg

என் க‌ண்க‌ள் 

காத‌லிடம் இருந்து தான் பிற‌ந்து கொண்ட‌தா வெட்க‌ம்?
உன் மேல் நான் காத‌ல் கொண்ட‌தும்

என் க‌ண்க‌ள் வெட்க‌ப் பூக்க‌ளை அணிந்து கொண்ட‌ன‌வே!

http://www.ferrabyling.com/wp-content/uploads/2009/04/flp-tasman-20090320-095850-lifes-journey.jpg

வாழ்க்கைப் பயணம் 

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்

இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது

எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை

திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை



10 comments:

Ahamed irshad said...

Nice

Anonymous said...

nalla irukkuthu.


suba

Anonymous said...

superrrrrrrrrrrrrrrr


mano

Anonymous said...

nalla irukku


bala

Pavi said...

நன்றி அஹமது இர்ஷாத்

Pavi said...

நன்றி சுபா

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி பாலா

Pinnai Ilavazhuthi said...

நல்ல படைப்பு பவி. இன்னும் நல்ல கவிதைகள் நிறைய வலைதளத்தில் உள்ளன. படியுங்கள். அப்படியே அந்த கவிதையின் சொந்தகாரர்ரையும் அவரின் வலைத்தளத்தையும் சொல்லுங்கள். அது தான் அந்த எழுத்தை நாம் அங்கீகரித்ததாக இருக்கும்.

Pavi said...

நீங்கள் சொல்வது சரிதான் .
நன்றி இளவழுதி வீரராசன்