ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இனிவரும் போட்டிகள் எல்லாம் மிகவும் முக்கியமான போட்டிகள் . அதி எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய சென்னை அணி நேற்றைய போட்டியிலும் தோல்வியை தழுவியது .
நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்து ஆடிய சென்னை 9 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை மட்டுமே பெற்றது . முன்னணி வீரர்கள் அனைவரினதும் பொறுப்பற்ற ஆட்டமே இதற்க்கு காரணம் . அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.. டெல்லி அணியும் முக்கிய விக்கட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும் கம்பீரின் அதிரடியினால் டெல்லி அணி வெற்றி பெற்றது .
நெஹ்ராவின் 3 விக்கட்டுகளையும் , சேவாக் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர் . அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறியது. 3-வது பந்தில் வார்னர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரில் சேவாக் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் தில்ஷானும் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கம்பீர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பொறுமையாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
18.4 ஓவர்களில் டெல்லி அணி 113 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கம்பீர் 57 ஓட்டங்களுடனும் , மன்ஹாஸ் 25 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
12 comments:
Ithu Highlights Effect
Thanks pavi
chennai ani arai iruthikku pokumo theriyavillai.
mano
நன்றி மகாராஜன்
பொறுத்திருந்து பாப்போம்
நன்றி மனோ
இப்போதுதான் இத்தொடரில் வேகம் பிடித்துள்ளது. என்னை பொறுத்தவரை சுவாரசியம் மட்டுமே முக்கியம். யார் ஜெயித்தாலும் கவலை இல்லை.
நான் எனது ஆதரவை டெக்கான் சார்செர்ஸ் அணிக்கு அளிப்பதாகவுள்ளேன்.. இதுக்கும் என்னை 'தமிழினத் துரோகி' என்று யாராச்சும் சொன்ன கடுப்பாயிடுவேன்! :P
ம்ம்ம்ம்ம்ம்ம் அதுவும் சரிதான்
நன்றி பாலா
உங்க கருத்த, விருப்பத்த நீங்க சொல்லுறீங்க .
நாங்க அப்பிடி ஒன்றும் சொல்ல மாட்டோம் .
நன்றி ஞானப்பழம்
ஆனா நேத்து நடந்த போட்டி செம.. யாருமே எதிர்பார்க்கல கடைசி இரண்டு ஓவர்ல இருபத்தைந்து ரன்கள் தோனி அடிப்பார்னு!
நா ஆதரவு தராட்டிதான் அவங்க வெற்றி அடையறாங்க :P
இது பிக்சிங் ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன். அரையிறுதி போட்டிகள் பெங்களூருவில் நடப்பதால் பெங்களூரு, சென்னை அணிகள் கண்டிப்பாக அரையிறுதி வரும் என்று என் நண்பர் ஒருவர் அடித்து கூறினார். அது போலவே நடந்தது. ஆனால் இப்போது குண்டு வெடிப்பு காரணமாக இடம் மாற்ற பட்டு விட்டது. இது பற்றி நான் ஏற்கனவே வெளியிட்ட பதிவு
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post.html
நன்றி ஞானப்பழம்
நன்றி பாலா
Post a Comment