Sunday, August 1, 2010

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகி விட்ட கார்த்தி

 பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகன் ஆகி விட்டார் நடிகர் கார்த்தி . குறுகிய காலகட்டத்திலே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுக்கும் நடிகர்களில் ஒருவராகவும் மாறி விட்டார் . பருத்திவீரனில் வெற்றி கொடி நாட்டிய கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சரிந்தாலும் பையா படத்தில் வெற்றி கொடி நாட்டினார் .
http://chennai365.com/wp-content/uploads/actors/Karthi/Karthi-Stills-7.jpg

 இப்போது நான் மகான் அல்ல படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் . இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தற்போது விற்பனையில் டாப் லிஸ்ட்டை எட்டி உள்ளது. நான் மகான் அல்ல படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


ரசிகர்களுக்கு கார்த்தியிடம் பிடித்த இன்னுமொரு விடயம் கார்த்தி இயல்பாக தனக்கே உரித்தான பாணியில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் தனது யதார்த்தமான பதிலை சொல்கிறார் . இயல்பாக பேசுகிறார் . இயல்பாக நடிக்கிறார். இவருக்கு இருக்கும் இன்னொரு ராசி இவருடன் நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து பேசுவது . நல்ல ஜோடி பொருத்தம் என்று தமன்னா - கார்த்தியை பையா படத்தில் நடித்து முடித்தவுடன் பேசினார்கள் . இப்போது காஜல் - கார்த்தி பற்றி கிசு கிசுக்கப்படுகிறது .


கார்த்தியின் முதல் இரண்டு படங்கள் வெளியாக நீண்ட நாட்கள் எடுத்து கொண்டதால் அதுபோன்ற படங்களின் இனி நடிப்பதை பற்றி யோசிக்கும் நிலையில் இருக்கிறார். இதைபற்றி பேசிய கார்த்தி, "அமீர், செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்களில் மறுபடியும் நடிப்பது ரொம்ப கடினமானது. இனி என்னால் இரண்டு வருஷம் மூன்று வருஷம் காத்திருக்க முடியாது. வயசாகிறதுக்குள்ளே நிறைய படங்களில் நடிக்கனும். ஆறு மாதத்தில் படத்தை முடிக்கிற நல்ல கதை வைத்திருக்கும் இயக்குநர்கள் வந்தால் ஓகேதான்"என்று வெளிப்படையாக பேசுகிறார் .

சுசீந்திரன் இயக்கி‌ உள்ள நான் மகான் அல்ல படத்தில்  கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படம் பற்றி கூறிய கார்த்தி, நான் மகான் அல்ல படம் உண்மை ‌சம்பவத்தை மையமாக கொண்டது.
 
இது டைரக்டர் சுசீந்திரனின் உறவினர் ஒருவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது; சென்னையின் மாறுபட்ட பக்கத்தை பெரிய திரையில் காட்டக் கூடியதாக இப்படம் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத புதிய முயற்சி என்றே இப்படத்தை சொல்லலாம்; அதனாலேயே இப்படத்தின் ரிலீசை மிகவும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கார்த்தி தெரிவித்தார். ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் எப்போது இந்த படம் வரும் என்று தானே . 

http://www.indiangossips.com/wp-content/uploads/2009/10/Karthi-and-Tamanna-in-Paiyya.JPG
பல பிரபலங்கள்  கார்த்தியின் நடிப்பு பற்றி பாராட்டி கொண்டு இருக்கிறார்கள் . , “நான் மகான் அல்ல” படம் பற்றி கார்த்தி கூறுகையில் படம் சிறப்பாக வந்துள்ளது. “பையாபட வெற்றிக்கு பின் யுவன் மீண்டும் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார். பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகு மிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார், என்றார். காதல் கிசுகிசு குறித்து அவர் பேசுகையில், நான் காதலிப்பதாக சொல்கிறார்கள். நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன், என்றும் கூறியுள்ளார் .

6 comments:

'பரிவை' சே.குமார் said...

kaarthik pugala irukku?

karthik rasigaiya pavi neenga?

sollaveyillai.

Pavi said...

ஏதாவது பதிவு எழுதுவம் என்று யோசித்தேன் . அப்போது கார்த்தியை பற்றி பதிவு எழுதலாம் என்று யோசித்து எழுதினேன் . எனக்கு கார்த்தியையும் பிடிக்கும் . நன்றி குமார்

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

மணிகண்டன் said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

Pavi said...

நன்றி மணிகண்டன் .
தளம் வருகிறேன்