இந்திய , இலங்கை , நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது . நேற்று ஆரம்பமாகிய முதல் போட்டியில் இந்திய, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது . இந்திய அணி படு தோல்வியை தழுவியது .
ஸ்டைரிஸ் (89), ரோஸ் டெய்லர் 95 ஓட்டங்களை பெற்று சதம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டார் .நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 288 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது . இந்திய தரப்பில் நெஹ்ரா 4, பிரவீண் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக், சேவாக் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். சேவாக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்பு வந்த வீரர்களும் நின்று நிலைக்கவில்லை .ரோஹித் ஷர்மா (6), யுவராஜ் சிங் (5), ரெய்னா (6), தோனி (2) என்று ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர் .ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறினர் .
29.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இந்திய அணி வெறும் 88 ஓட்டங்களை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தது.
நியூசிலாந்து தரப்பில் டபி 3, மில்ஸ், ஓரம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டெய்லர் 4 பிடி எடுப்புகளை பிடித்தார். 95 ஓட்டங்களை குவித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இவ்வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்றது. தவிர, போனசாக ஒரு புள்ளி பெற்றது.
3 comments:
sothappal thuduppaaddam thaan india tholvikku kaaranam.
kala
sothappal thuduppaaddam thaan india tholvikku kaaranam.
kala
நன்றி கலா
Post a Comment