Monday, November 8, 2010

தத்துவ பாடல் வரிகள்


மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
http://3.bp.blogspot.com/_6WqqjoYQvpY/TDbreR1xWgI/AAAAAAAAABw/SNsGl9ozWzQ/s1600/love2.jpg
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்
http://2.bp.blogspot.com/_QHQHmvqkm8Q/TFu0_qEWR1I/AAAAAAAAAA4/3hWUKQYDdtM/s1600/love.jpg
நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்
சாதியும் பேதமும் கூறுவான் - அது
வேதம் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு
http://www.xaraxone.com/FeaturedArt/gs2003/assets/images/southwestern_love_affair.jpg
வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி.
 
இன்றைய சிந்தனை :
நீ கனவில் கண்ட பெண்ணை விட
உன்னை கருவில் கண்ட தாயை நேசி
 

5 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla rasanai...

indraiya thaththuvam nalla irukku.

மங்குனி அமைச்சர் said...

nice one

Anonymous said...

super pavi..............


mano

Pavi said...

நன்றி குமார்
நன்றி அமைச்சரே
நன்றி மனோ

suji said...

super thathvam.thank you thank you very much pavi.