Monday, January 17, 2011

வியர்வை சிந்தி உழை

http://www.hinduonnet.com/seta/2002/05/02/images/2002050200140301.gif

வியர்வை சிந்தி உழைக்கிறான் 
குடும்பத்துக்காக உழைக்கிறான் 
கடினமாக உழைக்கிறான் 
உழைத்தல் தான் உயர 
முடியும் என்ற நம்பிக்கையில் 
http://4.bp.blogspot.com/_aW0UJZw4Lks/S02pCLSgRkI/AAAAAAAABbM/vLYIIxzKyC0/s400/69_NpAffrdvHover.jpg
உழைக்க தகுதியற்றவன் 
உலகில் பிழைக்க தகுதியற்றவன் 
ஆகிறான் அல்லவா ?
அதனால் வியர்வை சிந்தி 
உழைக்கிறான் - அல்லும் 
பகலும் அயராது உழைக்கிறான் .
http://3.bp.blogspot.com/_Sm2iqKdbBAI/TKPvoc_M6pI/AAAAAAAAAA8/ZCBgsSDYA1Q/s1600/vivasayi.JPG
தானும் மகிழ்ந்து தனது 
உறவுகளையும் கட்டி 
காப்பாத்தி ஏழைகளுக்கும் 
உதவி செய்கிறான் அவன் 
தான் மனிதன் - அவனது 
வியர்வையின் ஒவ்வொரு 
துளியும் ஏழைகளின் கண்ணீரை 
துடைக்கின்றனவே அதெல்லவோ 
வியர்வை - அவன் தன்மானமுள்ளவன் 
[scavenj11.jpg]
அதனால் தானே ஒரு 
வயோதிபர்களின் இல்லத்தை 
பராமரித்து வருகிறான் 
அவர்களின் துயர் துடிக்கிறான் 
வியர்வை சிந்தி உழைக்காதவர்களும்
பெரிய பதவிகளில் இருப்போரும் 
பெற்றோரை பாரமாக நினைத்து 
பணத்தை பெரிதாக நினைத்து 
பராமரிப்பு இல்லங்களில் அல்லவா 
பெற்றோரை விடுகின்றனர் .

இதில் ரை கட்டி உழைப்பவன் 
பெரிதா - அல்லது விறகு 
கொத்தியும் வயலில் 
விவசாயம் செய்தும் 
வியர்வை சிந்தி உழைப்பவன் 
பெரிதா - உறவுகளே 
சிந்தியுங்கள் சிந்தியுங்கள் 


5 comments:

svramani08 said...

"டை"கட்டி எனஇருக்க வேண்டுமோ?

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அழகான தேர்வு. அருமையான ஒரு பகிர்வு.
ரை கட்டி என்பது டை கட்டி என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சரிதானா சகோதரி.

Pavi said...

நான் சொன்னது கழுத்துப்பட்டி என்று அழைக்கும் ரை, ஆனால், டையும் பொருந்தும் . இருபொருள் தருகிறது . இரண்டும் கவிதைக்கு பொருந்தும்
நன்றி ரமணி

Pavi said...

நன்றி குமார்

nandakumar07 said...

அழகான படங்கள். அருமையான வரிகள். நன்றி nanda.