Thursday, June 9, 2011

ஏன் என்னை பிடிக்கவில்லை ?

http://ladynightwolf.edublogs.org/files/2011/02/Sad-boy-1300phy.jpg


பெண்ணே நீ ஒருவரையும் 

காதலிக்கவில்லை என்கிறாய் 
உன் அப்பாவோ கடவுள் 
நம்பிக்கை இல்லை என்கிறார் 
உன் அம்மாவோ நான் கைகாட்டும் 
ஒருவனை தான் என் மகள் 
கல்யாணம் செய்வாள் என்கிறார் 
இன்னும் யார் யாரோ எவரோ 
எல்லோரும் ஒவ்வொன்று 
சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் 
உனக்கு அழகில்லையா , படிப்பில்லையா 
அந்தஸ்துதான் இல்லையா 
எல்லாம் இருந்தும் நீ என் பெண்ணே 
இப்படி இருக்கிறாய் ? உனது மனம் 
என்ன கல்லா ? என்னை உனக்கு 
பிடிக்கவில்லையா ?ஏன் மறுக்கிறாய் ?
நீ எதிர்பார்ப்பது என்ன ? என்னிடம் கூறு 
உன் பதிலுக்காய் ஏங்கி தவிக்கும் 
ஒருவனாக நான் ............................

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் பெண்ணுக்கு தனியே முடிவெடுக்கும் உரிமையில்லை....

அதனால் காதல் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்படியே கேளுங்க ஒரு வேளை கிடைத்தாலும் கிடைக்கும்...

அட காதல்தாங்க...

Admin said...

புரியாத புதி்ர்தான்

Pavi said...

எப்பதான் இவை எல்லாம் மாறுமோ தெரியவில்லை
நன்றி சௌந்தர்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான்
நன்றி சந்ரு