Wednesday, October 5, 2011

மனச்சுமையை இறக்கி வையுங்கள்


எப்பவுமே மனதை இலேசாக வைத்திருக்க வேண்டும் . எமக்கு பிரச்சனைகள் இருக்கும்போது மனது கனமாக இருக்கிறது . மனதில் சுமை ஏற்படுகிறது . இதனை குறைக்க வேண்டும் .
http://api.ning.com/files/xYE9yapos5ffq3oVQrevdVVHp*p6QnvGT73I**E2FUBnthJgJNt5CFNdIRqgBgd4MuCj5I83OUDTD4rOUVP0aKb7cOgeKTD*/sad_man.jpg?width=350&height=348
மனதில் உள்ள சுமையை இறக்கி வைத்தால் பிரச்சனை இல்லை . இப்படியான சுமைகளை நாம் எமது பெற்றோரிடம் முறையிடலாம் . அவர்களிடம் சொல்ல இயலாததை எமது நண்பனிடமோ , நண்பியிடமோ முறை இடலாம் . அப்படி முறை இடும்போது எமக்கு ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் இருக்கும் . மனச்சுமையை இறக்கி வைத்தது போன்று இருக்கும் .

எமக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம் பெற்றோர் . மற்றயது ஆருயிர் நண்பர்கள் மட்டுமே . அவர்களிடம் நமது மனச்சுமையை இறக்கி வைக்கும்போது அவர்களிடம் ஒரு தீர்வு கிடைக்கும் . அல்லது இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று கூறுவார்கள் .

மகளின் மனச்சுமையை அப்பா தீர்த்து வைப்பார் . மகனின் மனச்சுமையை அம்மா தீர்த்து வைக்கிறார் . இப்படி சில குடும்பங்களில் நடக்கிறது . கூடுதலாக பெண்களுக்குத்தான் மனச்சுமை அதிகம் . மனதுக்குள் ஒரு சம்பவத்தை பூட்டி , பூட்டி வைத்தால் எமக்கு தீங்கு தான் . மனதுக்கும், உடம்புக்கும் தீங்கு தான் .

மனது எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் . தியானம் செய்ய வேண்டும் . மனதை ஒருநிலைபடுத்த வேண்டும் . ஒருவர் தொலைபேசியில் நீண்ட நேரம் கதைக்கும் போது மனதில் சுமை கூடுகிறது . அதே எமது பிரச்சனைகளை தொலைபேசியில் கூறும்போது மனச்சுமையை குறைத்துக் கொள்ளலாம் .




10 comments:

Nirosh said...

படித்து முடித்ததும் பாரம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள். தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

SURYAJEEVA said...

பல பேர் பதிவு எழுதுவதும் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கவே

காந்தி பனங்கூர் said...

100 % Unmai. anupava poorvamaana pathivu pola. Congrats.

r.v.saravanan said...

மனம் எப்போதும் தெளிந்த நீரோடை போல் வைத்து கொள்வது நன்று

'பரிவை' சே.குமார் said...

அனுபவப் பதிவாக இருந்தாலும் இது உண்மைதானே...

படித்து முடித்ததும் பாரம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு.

Pavi said...

நன்றி நிரோஷ்

Pavi said...

உண்மைதான் . நன்றி ஜீவா

Pavi said...

நன்றி காந்தி

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி குமார்