Friday, November 25, 2011

நடிகர் ரஜனியை உங்களுக்கு பிடிக்க காரணம்


http://3.bp.blogspot.com/_wlNs10DMkok/Rpc43TAwIgI/AAAAAAAAAsU/KC4x48p5XV8/s400/rajani.jpg
நடிகர் ரஜனியை கூடுதலாக எல்லோருக்கும் பிடிக்கும் . சூப்பர் ஸ்டார் அல்லவா . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவரின் படங்களை விரும்பி பார்க்கிறார்கள் . ரஜனி ஒரு ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் .

அநேக படங்கள் வெற்றி படங்கள் தான் . வசூலிலும் சக்கை போடு போடுகிறது ரஜனியின் படங்கள் . இப்போதெல்லாம் பழைய படங்களை ரீமேக் செய்யும் காலம் . அதில் ரஜனியின் படங்களை ரீமேக் செய்ய அதிகமானோர் விரும்புகிறார்கள் . ரஜனி நடித்த படத்தின் தலைப்பை பயன்படுத்தவும் துடிக்கிறார்கள் .
http://www.andhraspider.com/pictures/gallery/1533-Rajani-Kanth-in-Robo-Movie.jpg
எந்திரன் பல கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் என்று எமக்கு தெரியும் . நல்ல வசூல் போட்ட முதலை விட வசூல் ஆகி இருக்கிறது . ரஜனி சூப்பர் ஸ்டார் தான் என்று புரிகிறது . இந்த வயதிலும் ரஜனி பட்டையை கிளப்பிக் கொண்டு தான் இருக்கிறார் . ரஜனியை அசைக்க முடியாது . 

சரி விசயத்துக்கு வருவோம் . ரஜனியை எல்லோருக்கும் பிடிக்கிறது . ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இருக்கிறது . நான் சின்ன வயதில் இருந்து ரஜனியின் படங்களை அதிகம் ரசித்து பார்ப்பதுண்டு . அவரின் நடிப்பு , ஆக்சன் , ஸ்டைல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .
http://www.alaikal.com/news/wp-content/rajani-22.jpg
பாட்சா, எஜமான்  படத்தில் அவரின் நடிப்பு பிடிக்கும் . முத்து , படையப்பா அவரின் ஸ்டைல் பிடிக்கும் . எந்திரன் பிரமாண்டம் . இப்படி ஒவ்வொரு படங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம் . தலையை சிலுப்பி விடும் விதம் , பாடல்களில் அவரின் நடிப்பு , நகைச்சுவை காட்சியில் அவரின் நடிப்பு, பாணி என்பன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .
http://image1.indiaglitz.com/telugu/news/Rajni050308_1c.jpg
சினிமாவுக்கு வெளியில் என்று பார்த்தால் எல்லோரிடமும் எளிமையாக பழகும் விதம் , ஏனைய நடிகர்களை ஊக்குவிக்கும் பாங்கு போன்றன எனக்கு பிடிக்கும் . நண்பர்களே உங்களுக்கும் ரஜனியை பிடித்து இருக்கும் . உங்களுக்கு பிடித்த விடயங்கள் என்ன ? வாங்க உங்க கருத்தையும் தெரிவியுங்க ....

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதலில் எளிமை..

இங்கு ஒரு படம் நடித்து விட்டலே பந்தாப்பண்ணும் சினிமா உலகத்தில் 150 படங்கள் நடித்துவிட்டு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்கும் சுபாவம் என்னை மிகவும் கவர்ந்தது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்து பக்தி..

தொழில் மீதும், பாபா மீதும் அவர் கொண்டுள்ள பக்தி அபரிமிதமானது...

இன்றும் கூட தான் கொண்ட கொள்கை மாற்றாமல் நடித்து வருகிறார்.

எவ்வளவு பணம் வந்தாலும் பக்தி குறையாமல் இருக்கிறது தலைவரிடம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரஜினியின் உதவும் குணம்...

வெளியில் தெரியாத பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறார் இவர்.

தன்னை வைத்து படம் எடுத்து தற்போது நொடிந்த பல தயாரிப்பாளருக்கு தற்போது படம் நடித்து கொடுத்து உதவியிருக்கிறார்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கடைசிய எனக்கு பிடித்தது அவரது ஸ்டைல்...

r.v.saravanan said...

அவரது எளிமை , அவரது ஸ்டைல் வேகம் உதவும் உள்ளம். யாருக்கும் தீங்கு நினைக்காத மனசு இதெல்லாம் அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்

Pavi said...

உண்மைதான் . எனக்கும் மிகவும் அவரை பிடிக்க காரணம் அவரது குணங்களும் , நடிப்பும் தான் . நன்றி சௌந்தர்

Pavi said...

நன்றி சரவணன்