Friday, December 30, 2011

2011 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர்


http://www.hummaa.com/static_content/images/meta/img/artist/na-muthukumar.jpg
தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்கள் வருகின்றன . ரசிகர்கள் இப்போது இசையை மட்டுமே ரசிப்பதில்லை . பாடலின் வரிகளையும் ரசிக்கிறார்கள் . வாலி , வைரமுத்து ஆகியோரின் பாடல்களை ரசிக்கிறார்கள் . பழைய காலத்து பாடல்கள் என்றால் கண்ணதாசனின் பாடல்வரிகள் சிறப்பாக இருக்கும் . தனக்கென தனியாக வாலி, வைரமுத்துக்கு பிறகு ஒரு இடத்தை பிடித்திருப்பவர் பாடலாசிரியர் நா . முத்துக்குமார் தான் .

இவர் இந்த ஆண்டு 98 பாடல்களை எழுதியுள்ளார் . அதில் பல ஹிட் பாடல்கள் . ரசிகர்களை கவர்ந்த பாடல்கள் . எல்லோருக்கும் பிடித்து இருந்தது . வரிகளை கேட்டு கேட்டு ரசித்திருந்தனர். அதிக இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார் . அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் பல புதிய படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் . 
http://tamilvip.com/media_thumbs/3727.jpg

ஏழாம் அறிவு படத்தில் கார்த்திக் பாடிய "முன் அந்திச் சாரல் நீ " எல்லோராலும் விரும்பப்பட்டது . நா . முத்துக்குமாரின் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் . நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று . பாடகர் கார்த்திக்குக்கும் ஹிட் பாடலாய் அமைந்தது . 

கோவிந்த கோவிந்தா... (எங்கேயும் எப்போதும்), உன் பேரே தெரியாதே, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்..., ஆரிரரோ... , விழிகளில் ஒரு வானவில்... (தெய்வத் திருமகள்), வாரேன் வாரேன்... (புலிவேசம்), விழிகளிலே விழிகளிலே... (குள்ளநரிக் கூட்டம்) என்று பாடல்கள் நீண்டு கொண்டு செல்கின்றது . இந்த பாடல்கள் எல்லாம் இந்த வருட ஹிட் பாடல்களில் அடங்கும் . ரசிகர்கள் பலரை மீண்டும் , மீண்டும் கேட்க தூண்டிய பாடல்கள் .
 http://chennai365.com/wp-content/uploads/movies/Engeyum-Eppothum/Engeyum-Eppothum-Stills-032.jpg
பில்லா 2, நண்பன், வேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரவான், தாண்டவம் என அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார் . அதில் நண்பன் பாடல்கள் வெற்றிநடை போடுகின்றன .நண்பன் படத்தில் இரண்டு பாடல்களை நா. முத்துக்குமார் தான் எழுதியுள்ளார் . "நல்ல  நண்பன்  வேண்டும்  என்று " என்ற பாடல் நட்பை பற்றிய பாடல் .  வேட்டை , நண்பன் படங்கள் பொங்கலுக்கு வெளிவர இருக்கின்றன . அடுத்த ஆண்டு பாடல்கள் இன்னும் அதிகம் எழுதுவார் போல் இருக்கிறது . தனக்கென்று தனியாக ஒரு நல்ல பாடலாசிரியராக வம் வருகிறார் நா. முத்துக்குமார் அவர்கள் .

அர்த்தமுள்ள பாடல்வரிகள் , எல்லோருக்கும் விளங்க கூடிய வசனங்கள் , அழகான கோர்வை என வித்தியாசமாக தனக்கென்று ஒரு பாணியை அமைத்து பல பாடலாசிரியர்களுக்கு மத்தியில் மிளிரும் வைரமாகத் திகழ்கிறார் நா. முத்துக்குமார் . அடுத்த ஆண்டும் வெற்றிகள் , ஹிட்ஸ் தொடரட்டும் .




 

No comments: