Tuesday, January 10, 2012

அந்த விவசாயியின் மனம் ......

 http://dogbarkpark.files.wordpress.com/2010/08/wheat-field-right-before-harvest.jpg
என் கனவெல்லாம் தீரப்போகிறது 
அவனின் கடனை அடைக்க வேண்டும் 
என் மனைவிக்கு ஆசையாக பட்டு 
புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் 
இந்த வருடம் நல்ல காலம் 
பிறக்க வேண்டும் என்று எண்ணிக் 
கொண்டே நாட்களை அறுவடைக்காக 
எண்ணிக் கொண்டு தூங்குகிறான் 
அவன் - காலையில் எழுந்து பார்க்கிறான் 
மழை வெள்ளத்தில் நெற்பயிர்கள் 
அடித்து செல்கின்றன - அவனின் 
நினைவுகள் கனவாகவே போனது 
நனவாகவில்லை - தவிடு பொடியாகியது 
மனது சுக்கு நூறாகியது ......

2 comments:

பாலா said...

விவசாயிக்கு இயற்கை கூட எதிரியாகத்தான் நிற்கிறது.

Pavi said...

உண்மைதான் . நன்றி பாலா