Thursday, August 19, 2010

காதலா , நட்பா எது சிறந்தது ???

http://gosmellthecoffee.com/wp-content/uploads/2008/05/friends.jpg
காதலா, நட்பா எது சிறந்தது என்று எல்லோருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அபிபிராயங்கள் இருக்கும் . நானும் எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் . இரண்டும் அன்பு சம்பத்தப்பட்ட விடயம் . ஒருவர் காதல் என்பர் , மற்றவர் நட்பு என்பர் . சிலர் இரண்டும் சிறந்தது என்பர் .

நட்பு காதலாக மாறுவதும் உண்டு . காதலர்கள் பின்பு நட்பாக இருப்பதும் உண்டு. இது எல்லோருக்கும் பொருந்துவதும் இல்லை . நண்பர்களாக இருந்து பின்பு காதலில் முடிந்து கல்யாணம் செய்த தம்பதியினர் பிரிந்து வாழும்நிலையும் உண்டு. இது அவரவர் மனம் , சூழல் , குடும்ப பின்னணி போன்ற காரணங்களில் தங்கி உள்ளது .
http://www.toddweinstein.com/images/pjLovers.jpg
உருவத்தை கண்டு வரும் காதல் தவறு. அது நீண்டகாலம் நிலைப்பதில்லை . மனம் சம்பந்தப்பட வேண்டும். இரு மனங்கள் சேர்ந்து ஒரு மனம் ஆவது தான் திருமணம் . இதயத்தை கண்டு வரும் காதல் சிறந்தது . தத்தமது விருப்பு, வெறுப்பு , அன்பு என்று பல விடயங்களில் ஒத்து போய் நான் இவளை கல்யாணம் செய்தால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும் . அது மனங்களின் சங்கமம் ஆக இருக்க வேண்டும்  . பார்த்ததும் காதல், நொடிப்பொழுதில் காதல் இதெல்லாம் படங்களில் மட்டும் தான் . நியத்தில் ஒத்து வராது . காமம் அழித்த காதல் உண்மையான நட்பாக  பரிணமிக்கிறது.
http://www.studentbeans.com/images/tellFriends/friends.png
சிறுவனும் சிறுமியுமாக பழகும் போது நட்பு. பல விடயங்களை பேசுவார்கள் . உணவை பரிமாறி கொள்வது , இருவரும் சேர்ந்து விளையாடுவது , சேர்ந்து கோவில்களுக்கு போய் வருவது என்று இப்படி பழகுவது நட்பு.  அதே ஆட்கள் வயது வந்து பழகும் போது காதல். அவர்களுக்குள் இருக்கும் அன்பு இன்னும் அதிகரிக்கிறது . அவர்கள் திருமணம் செய்யும் போது காதல் என்ற சொல் அன்பாக மாறுகிறது.

ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆண்மகனை பார்த்து, பேசி, பழகி, புரிந்து கொண்டு , இவனோ/ இவளோ நமது  வாழ்க்கையில்  வந்தா இவ்வளவு நன்றாக இருக்கும், அப்படினு நாம் நினைச்சு அதுக்கப்பறம் வருவதே உண்மையான காதல், அது தெய்வீக காதல் .  எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள தைரியமுள்ளவர்கள்  காதலித்து கரம் பிடித்தால் அவர்கள் வாழ்க்கைதான் சொர்க்கம். காதலும் நட்பு, பாசம் என்பதுபோல் அன்பில் ஒரு வகைதான்.ஒரு நட்பில், பாசத்தில் இருக்கும் அதே புனிதமும், கற்பும்தான் காதலிலும் இருக்கிறது.
http://bluemoviereviews.files.wordpress.com/2009/02/2-lovers-1.jpg
பூமியில் விழுகின்ற மழைத்துளி மண்ணில் கலக்கிறது. காதலில் விழுகின்ற கண்ணீர்த்துளி நட்பில்  கலக்கிறது . ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிந்துணர்வும், விட்டு கொடுத்தலும் இருக்கும் போது தான் அது  காதல் முழுமையானதா மாறுகிறது .

நட்பு என்பது எந்த வித சொந்த, பந்தமோ ஒன்றும் இல்லாமல் வருவது . அது நீண்ட நாட்களுக்கு பழகி நட்புக்காக எதையும் செய்யும் அளவுக்கு இருப்பது . என்றும் அழியா நட்பு கல்லறை போன்றது . உறுதியான நட்பு கருங்கல் போன்றது . ஒருவன் நல்லவனாக மாறவோ, தீய வழி போகவோ நட்பு துணை போகிறது . நல்ல நட்பு என்றும் பேசப்படும் . எங்கு இருந்தாலும் நண்பர்கள் அதே சந்தோசத்துடன் இருப்பார்கள் . நட்புக்கு எல்லை இல்லை . கடல் கடந்தும் தொடரும் . நண்பன் இல்லாத வாழ்வு சோக வாழ்வு . நண்பனுடன் இருக்கும் பொழுதுகள் ஜாலியானவை . இப்படி இருக்கும் நட்புத்தான் நின்று நிலைக்கும் .
http://www.mccullagh.org/db9/10/lovers-central-park.jpg
காதல் காதல் என்று எத்தனை பேர் அலைகிறார்கள் . எத்தனை பேரின் காதல் கைகூடுகிறது இன்று . பல காதல்கள் தோல்வியில் தான் முடிகிறது . மனம் சம்பந்தப்படுவதில்லை இப்போதைய காதல் எல்லாம் எப்படி தெய்வீக காதல் என்பது ? பணம், பொருள் பண்டம் , சொத்து , சுகபோக வாழ்க்கை பார்த்து வருவது காதல் அல்ல . உனக்காக நான், எனக்காக நீ என்று வாழ வேண்டும் . அதுதான் உண்மையான காதல் . வசதி , அந்தஸ்து பார்த்து வர கூடாது .
http://1.bp.blogspot.com/_iTwpjOELp_0/SNHerYigIQI/AAAAAAAAA6U/e-3BAJNdZPM/s400/friendship1.jpg
என்னை பொறுத்த வரையில் நண்பர்கள் காதலர்கள் ஆகலாம் . எனினும் என்றும் நமக்கு நட்பு தான் சிறந்தது . இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள கூடாது . நட்பு தான் சிறந்தது என்பேன் நான் . இன்றும் ,என்றும் ,எப்போதும் .












 

8 comments:

ஸ்ரீ.... said...

எனது கருத்தில் நட்புதான் சிறந்தது.

ஸ்ரீ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப அருமையா அலசியிருக்கீங்க ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இவனோ/ இவளோ நமது வாழ்க்கையில் வந்தா இவ்வளவு நன்றாக இருக்கும், அப்படினு நாம் நினைச்சு அதுக்கப்பறம் வருவதே உண்மையான காதல்

///

உண்மை தான்... ஆனால் அப்படி நினைத்து மனதில ஆசைகளை வளர்த்து.. சூழ்நிலைகளுக்காக அதனை உதறி விட்டு உண்மையான நட்பு என்ற ஒரு போர்வையை நானும் ஏன் தோழியும் போத்தியிருக்கிறோம்..அதை பற்றி ஏன் பதிவில் எழுதியிருக்கிறேன்.. முடிந்தால் படிக்கவும்..http://verumpaye.blogspot.com/2010/08/blog-post_19.html

'பரிவை' சே.குமார் said...

உங்களது அலசல் பட்டிமன்றத்தில் என் மனதில் தோன்றிய நட்பே சிறந்தது என்ற தீர்ப்பே முடிவாய் வந்துள்ளது.

நல்ல பகிர்வு.

Pavi said...

நன்றி ஸ்ரீ

Pavi said...

நன்றி வெறும்பய

Pavi said...

வாசித்தேன் . அருமையான உணர்வு . நன்றாக இருந்தது .

Pavi said...

நன்றி குமார்