Sunday, September 5, 2010

என்னை கவர்ந்த பாடல்


எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. கூடுதலாக எல்லோரினதும் மனம் கவர்ந்த பாடல் . உங்களுக்கும் பிடித்திருக்கும் கேட்டு பாருங்கள் . அல்லது வரிகளை பாருங்கள். உங்களையும் கவர்ந்து இருக்கும் .

படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
நீயும் வளர் பிறையாக நிலவே
உயிரை தருவேன் காதல் நிலவே நிலவே
(எந்தன் வானின்..)

வெண்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
வெண்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
மின்னல் கோடி சேர்த்து வைத்து நீ சிரித்த காட்சிகள்
யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்
உன்னை எண்ணி வாழ்ந்த காலம் கண்கள் ரெண்டும் ஈரமாக
காதல் ஒன்றும் காயமல்ல காலப்போக்கில் ஆறி போக
நெஞ்சம் எல்லாம் வாடுதே தழும்புகளை
(எந்தன் வானின்..)

என்னை விட்டு போனது அமைதியன்றோ
நீயும் இல்லா நானுமே அகதியொன்றோ
நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி
எந்தன் காதல் நீ அறீந்தால் போதும் அந்த ஓர் நொடி
புல்லின் மீது போகும் போதும் கால் சிவந்த மென்மை நீ
கல்லின் மீது நீயும் இங்கே போவதென்ன கண்மணி
இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கென தான்
(எந்தன் வானின்..)

 

3 comments:

priyamudanprabu said...

ரொம்ப நாள் ஆச்சு கேட்டு
நன்றி

'பரிவை' சே.குமார் said...

Nalla padal.

Pavi said...

நன்றி குமார்