Monday, November 14, 2011

பட்டினிச்சாவும் , வறுமையும்


http://internationalhealthrelief.files.wordpress.com/2011/04/hunger.jpg
ஒவ்வொரு நாளும் பட்டினியாலும் , வறுமையாலும் எவ்வளவு உயிர்கள் இந்த உலகில் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள் . உணவு, உறைவிடம் , உடை இன்றி தவிக்கிறார்கள் . பஞ்சம் , பசி என ஒருவேளை உணவுக்கு கூட வசதி இல்லாமல் இருக்கும் குடும்பங்கள் எத்தனை . எங்கே செல்கிறது இந்த உலகம் .

சில வசதி படைத்தவர்கள் தாம் முன்னேறி தாம் சந்தோசமாக வாழ்ந்தால் சரி. மற்றவர்களை பற்றி எமக்கு கவலை இல்லை என்று அதிக செலவுகள் செய்து சொகுசாக வாழ்கிறார்கள் . செல்வந்தன் இன்னும் வசதி கூடி சொத்து , சுகபோகங்களுடன் வாழ்கிறான் . ஏழை அவன் இன்னும் தாழ்ந்து போகிறான் . அவன் முன்னேற இந்த உலகில் அவனுக்கு வாய்ப்புகள் , வசதிகள் இல்லை .
http://3.bp.blogspot.com/-fLCtHqbm0MI/TaIIoHY9QSI/AAAAAAAAADU/zxdFuBdjFD0/s1600/world-hunger.jpg
இன்று உலகில் வேலையில்லாப் பிரச்சனை அதிகமாகி விட்டது . இளைஞர் , யுவதிகள் திண்டாடுகின்றனர் . படித்து விட்டு நல்ல வேலையை எதிர்பார்த்து தமது காலத்தை வீணடிக்கின்றனர் . படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கூட கிடைப்பதில்லை .

பிறந்தநாள் கொண்டாட்டம் , கல்யாணம் என்று ஆடம்பரச் செலவுகள் செய்கிறார்கள் . அதிகம் செலவு செய்து ஆகோ  ...ஓகோ என்று கொண்டாட்டங்கள் கொண்டாடுகிறார்கள் . சாப்பாடுகள் விதம் விதத்தில் ஓடர் செய்கிறார்கள் . எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் மீதியாக உள்ள சாப்பாட்டை கொட்டுகிறார்கள் . அதனை ஒருவேளை கூட சாப்பிடாத , கஷ்டப்பட்ட மக்களுக்கு கொடுத்து அவர்களின் வயிற்று பசியை போக்கினால் என்ன . அதனை இவர்கள் செய்வதில்லை . அப்படி அவர்கள் வாயார சாப்பிட்டு வாழ்த்தும் போது எவ்வளவு சந்தோசம் வரும் தெரியுமா ?
http://files.coloribus.com/files/adsarchive/part_848/8482805/file/childrens-hunger-charity-tug-small-78203.jpg
இருப்பவர்களுக்கு கொடுத்து பயனில்லை . இல்லாதவர்களுக்கு கொடுக்கும் போது தான் எமது மனம் குளிரும் . இருப்பவர்கள் புளியப்பத்தில் வந்து அதையும், இதையும் போட்டு இரண்டு வாய் சாப்பிட்டு கொட்டி விட்டு போவார்கள் . இல்லாதவர்கள் , பசியோடு இருப்போருக்கு கொடுக்கும் போது அவர்கள் ஒன்றும் விடாமல் வயிறார சாப்பிட்டு நம்மை ஒரு சந்தோசத்துடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள் . அதுதான் திருப்தி .

இன்னும் சில நாடுகளில் போதிய உணவு , தண்ணீர் இல்லாமல் எவ்வளவு குழந்தைகள் , பெரியோர்கள் இருக்கின்றனர் . அவர்களை பார்த்தால் ஆவது நாம் திருந்த வேண்டாமா ?கொட்டாமல் , சிந்தாமல் உணவுகளை உண்ணுங்கள் . நமக்கு இறைவன் மூன்று
வேளையும் சாப்பிட்டு நன்றாக இருக்கின்றோமே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் . 

4 comments:

பாலா said...

உலகின் ஒருபக்கம் வீங்கி கொண்டேபோகிறது, மறுபக்கம் தேய்ந்து கொண்டே போகிறது....

இராஜராஜேஸ்வரி said...

நமக்கு இறைவன் மூன்று வேளையும் சாப்பிட்டு நன்றாக இருக்கின்றோமே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்

.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!??

Pavi said...

நன்றி பாலா உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

Pavi said...

நன்றி ஈஸ்வரி அவர்களே உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்