Saturday, April 9, 2011

கார்த்தியின் அடுத்த படம் என்ன ?

http://flashnewstoday.com/wp-content/uploads/2010/11/karthi_image.jpg

தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இப்போது கார்த்திக்கு . நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளது . வெற்றிகளையும் ருசித்துள்ளது . இயக்குனர்களின் கையை கடிக்காமலும் உள்ளது என்று எல்லோரும் கார்த்தியை தேடி படை எடுக்கிறார்கள் . அதனை விட சிறுத்தையின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த படம் என்ன , என்ன என்று அவரின் ரசிகர்கள் எல்லோரும் காத்து உள்ளனர் .
http://chennaionline.com/images/articles/September2009/ff8970fb-da48-4b2c-ba4c-30cc6e4943c7OtherImage.jpg
பல இயக்குனர்களும் கார்த்திக்கு கதை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . இப்போதுதான் கார்த்திக்கு பிடித்த மாதிரி ஒரு கதையை சொல்லி இருக்கிறாராம் இயக்குனர் ஒருவர் . பல கதைகளை கேட்ட கார்த்தி இறுதியாக தேர்ந்தெடுத்திருப்பது புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையை. இவர் வேறு யாரும் இல்லை . அவர் தான் சங்கர் தயாள் . இவர் இயக்குநர்கள் எழில், எஸ்.டி.சபாபதி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிவர்.
http://www.karthiksivakumar.net/wp-content/uploads/2010/12/KarthiSiruthai4_thumb2.jpg
பல குழப்பங்களுக்கு மத்தியில் அடுத்த படத்துக்கு சரியான கதையை தெரிவு செய்து அந்த படத்துக்கு  'சகுனி' என்று பெயர்  வைத்திருக்கிறார்கள் . இப்போது படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பதற்கே ஒரு மாதம் வேண்டும் போல் இருக்கு . அப்படி தேடி பிடிக்க வேண்டு இருக்கிறது படத்தின் பெயரை . 

இப்படத்திற்கு இசை  ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, கலை: ராஜீவன், படத்தொகுப்பு: ஆண்டனி. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது . 
http://1.bp.blogspot.com/_g31KVvREHW4/TOvY4IesU5I/AAAAAAAAA38/yJsS0IEB4qQ/s1600/Actor+Karthik+Sivakumar+Actress+Tamanna+Siruthai+Latest+Tamil+Movie+Stills+Images+Photos+Gallery+%25284%2529.jpg
பல ரசிகர்களின் விரும்பும் ஹீரோ ஆக மாறி உள்ள கார்த்திக்கு சகுனி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை . பார்ப்போம் இந்த படத்திலும் பட்டையை கிளப்புகிறாரா என்று . சிறுத்தை படத்தில் நடனத்திலும் , அங்க அசைவுகளிலும் , நடிப்பிலும் அசத்தி இருந்தார் கார்த்தி என்பது அனைவரும் அறிந்ததே . 

2 comments:

r.v.saravanan said...

present pavi

Pavi said...

நன்றி சரவணன்